செவ்வாய், 21 ஜனவரி, 2025

439 (983) தமிழன் மானம் அழிக்காதே!

 


               




தமிழன் மானம் அழிக்காதே!

(இக் கவிதை   அலைகள் இணையத் தளத்தில் 18-12-2012ல் பிரசுரமானது.)


அழகிய கண்ணால் பார்த்திடு!

அழகுடன்அருளைக் காட்டிடு!

அழலாக அறிவொளி கூட்டிடு!

விழல் தொழில்களை விரட்டிடு!

நிலையற்று நாளும் அடுத்தவரது

நிலைப்பாட்டுயர்வைத் தாங்காது

அலைதல்  அலைக்கழித்தல் என்ற

தலைகளற்ற நிலை மாற்று!

00

நிலைதடுமாறுவோர் சங்கமத்தில்

விலையற்ற விழலான ஒரு

வலையமைப்பு ஏன்! பெரு

கலை கலாச்சார அழிவேன்!

புத்திக்கு வேலை கொடு!

கத்தி புத்தியழிந்தவன் பாட்டு

உருகிடப் பேசு! வன்முறையற்று

உருக்குக் கருவியையும் வீசு!

00

தன் ஆக்கம் வேண்டாதோன்

பிறன் ஆக்கம் அழிப்பான்

ஒரு தடவை பிறப்பு

கருமையாயேன் பெருமழிப்பு!

மூதேவியை அணைப்பது வீண்!

சீதேவியை அணைப்பது தேன்!

தமிழனே அறிவால் வெல்லு!

தமிழன் பெயரைக் காத்திடு!

00

பொதியான அறிவைத் திற!

நிதியான தமிழன் கலாச்சார

மதிப்பை உயர்த்து! காலித்தன

கொதிப்பு நோய் பாதிப்பு!

சங்கைக் கேடாகத் தமிழ்

சங்கு ஊதாதே தமிழா!

எங்குமுன் பண்பாடு காத்து

பாங்குடன் ஓங்கிடு தமிழனென்று!


வேதா. இலங்காதிலகம்.   தென்மார்க்  21 - 1-2025






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

568 (1068) sanrithal - (பெண்மை) யாதுமாகி நின்றவள் பெண்ணே!

                 (பெண்மை)    யாதுமாகி நின்றவள் பெண்ணே!   - ( தேன்தமிழ்க் கவிவனம். சர்வதேச மகளிர்தினச் சிறப்புப் பேட்டி.) 00 (குமைதலின்றி – ...