சொற்கள்
சொற்களை மதிப்பவர் தமிழின்
சொற்சுவை அறிந்த நேசர்.
சொற்பமென்பவர் சொல்வளம் அறியாதவரோ!
சொல்லணி, சொல்லதிகாரம் அறியாது
சொரி மணல் போன்று
சொரிவோரும் பலர் உளர். 19-5-2020
0000
இறைவனின் பார்வை வேண்டாமா!
அன்பீரம், அறிவீரம், கருணையீரம்
மனித மன ஈரத்தால்
என்றும் நெகிழ்வு மனமாகும்
நன்றென்று உபதேசம் ஊருக்கே! சிலருக்குத்
தன்பாதை தலைகீழ்த் தவமாகும்!
0000
நீதி சுரக்கும்...
பீதி கொள்ளாது என்றும்
நீதி சுரக்கும் மனக்கேணி
மேதினியில் வேற்றுமை பாராது
மாதுன்னை அலட்சியம் செய்பவரோடு
மோதி வருந்தாது விலகியிரு!
மதியாரெனில் அவ்வளவே மதிநுட்பம்
மலடாகியது என்று நினைத்திடு!
மடமையே பகிரப்படும் அலட்சியம்
மலையருவியாய் நன்மை செய்ய
மகத்துவப் பிறவி வேண்டும்.
0000
22-6-2020