திங்கள், 18 மே, 2026

588 (1088) மாயக் காலம்.

 

       


 மாயக் காலம்.

00
(கேலம் -விளையாட்டு. சாலகம் - சிலந்திவலை.
தாலம் -பனைமரம். நாலா - பள்ளத் தாக்கு.)
00
காலம் ஒரு நீண்ட கனவு
ஆலம் விழுதாக நீளும்
ஓலமிடும் அலையாகும்
பலகேலமும் ஆகும்.
கோலமாகி மகிழ்வு தரும்.
சாலகமாகி பின்னலிடும்.
தாலம் போல உயரும்.
நாலாவாகவும் ஆழமாகும்.
00
மாயச்சொல் காலம்.
மரத்தில் வரையாக கணக்கிடும்.
முதியோர் மௌனம் உடைக்கும்.
முகிழ்ந்து மனதில் குமிழியாகும்.
முக்காலம் என்ற பிரிவில்
மயிலிறகு தடவும் இன்பமாயும்
கவிதை வாசிப்பிலும் கரைகிறது காலம்.
காலத்தால் எதுவும் முடியும்.(நாள் செய்வது நல்லோர் செய்யார்)
00
பாடசாலை மணியும் கல்வியும்
காத்திருத்தலும் பெறுமதிக் காலமே.
தொடர்பு - தொந்தரவு- எதிர்பார்ப்பற்றது.
தூக்கம் கொடுப்பதும் கெடுப்பதும்
துயரை மறக்கடிப்பதும் காலமே.
காலம் ஊமை தான்.
பெற்றவர் நினைவை மறக்கடிக்காது.
காலமறிந்து பயிர் செய்யணும்.
00

முத்தமிழ் தாரகை – வேதா. இலங்காதிலகம் -தென்மார்க். 18-5-2026




ஞாயிறு, 17 மே, 2026

587 (1087) uudakam.... ATBC radio KUDUMpam

 

      https://www.facebook.com/sownthary.sivananthan/videos/1678801443274002

        


 குடும்பம்.

 (சௌந்தரி வானொலி அவுஸ்திரேலியா. முதலாவதாக வாசிக்கிறார் எனது கவிதை)

00
குடும்பம் ஒரு கதம்பம்.
ஒடுங்காத சமூக அமைப்பு.
நடுங்காத பாதுகாப்பு அரண்.
பிடுங்கல் பிக்கலற்ற இணைப்பு.
00
அன்பைக் கொடுத்து எடுக்கும்
இன்ப சொர்க்கம் பிரிவற்றதானால்.
மன்பதையின் மலர்விரியும் நந்தவனம்.
முன்னேறும் சமூகத்தின் கல்வியகம்.
00
தந்தை தாய் சகோதரமென
சிந்தை கவரும் உறவுகள்.
விந்தையான கவிதைச் சிகரங்கள்.
உந்து விசையான ஊன்றுகோல்கள்.
00
பெறற்கரிய மழலைச் செல்வங்களால்
திறனுடைய பெருவிருட்சமாகிறது.
சிறகுகள் ஒன்றையொன்று அணைக்கும்
நிறமுடைய அன்பிங்கு உரம்.
00
ஒற்றுமை தியாகம் விட்டுக்கொடுத்தல்
இற்றுவிடாத உயர் குணங்கள்.
பற்றுமிக்கத் திடமானது குடும்பம்.
பாசதீபம்- பல்கலைக்கழகம் -கடவுளின் பரிசு
00
கவியருவி - வேதா. இலங்காதிலகம்.தென்மார்க். 13-5-2026


    

         

செவ்வாய், 12 மே, 2026

586 (1086) தாரதம்மிய( ஏற்றத் தாழ்வு.) உலகு 00

 

    

      



  தாரதம்மிய( ஏற்றத் தாழ்வு.) உலகு   

00

தாய்நாட்டிலும் அயல் நாட்டிலுமேன்

தாரதம்மியமற்ற உலகிலும் இலஞ்சம்

தரித்திரமான கொலை கொள்ளை நம்பிக்கைத் துரோகம்.

தனத்திற்காகப்  பண்பை எறியும் பாதகர்கள்.

00

மானம் இழக்க விரும்பாத தன்மானிகள்

மறுபுறம் மாயவேடமிடும் மாட்சிமையற்றவர்.

பூவிரித்த பாதையில் பாடி ஆடுதலல்ல

பூலோகம்- அது நெருப்பில் நடப்பது.

00

கானல் நீர்  வாழ்வு தானுலகு

கனவுக் கன்னியர் கையில் புரள்வதல்ல

தூவானம் என்றும் பெருமழையாகாது

வெற்றி என்பதும் பூவாணம் விடுவதல்ல

00

நம்பிக்கையில் காலூன்றி நிமிர்ந்து பார்!

உன் சொந்த எண்ணத்தில் எழு!

விடம் கக்கும் நட்புகளைத் தள்ளு!

விரிந்த உலகில் உயர வழியுண்டு!

00

பணம் புரட்டும் பதவி நாடகம்

பாரையே கேவலமாக்குகிறது

பாகுபாடின்றிப் பாக்கியசாலியாய்ப் பாசாங்கின்றி

பாதம் எடுத்து வைத்து முன்னேறு!

00

கவித்திலகம்  வேதா. இலங்காதிலகம். தென்மார்க்- 12-5-2026


     




சனி, 9 மே, 2026

585 (1085) uudakam...ATBC radio - amma

 




     

     https://www.facebook.com/sownthary.sivananthan/videos/2133299903912370


     அம்மா!.... ( சௌந்தரி ATBC radio)

00
உன் முகம் பார்த்தேன் முதலில்
மென் கன்னம் இணைந்தது உடனே
சின்னக் கரங்கள் தொட்டது மெதுவாய்
அன்பாய் அணைத்தாய் உன் மார்பிலே
00
அம்மாவின் வாசனை வசமாய் இழுத்தது
அகப்பட்டது அமுதமான தாய்பால்
ஆனந்தித்து அருந்திட அருகில் வந்தார்
ஆசை முத்தம் தந்தார் அப்பா
00
முதல் ஆசிரியை நீ உலகை
முழுதாய் அறிந்தேன் இருவரிடமும்
முதலிசை அம்மா உன் இதயத்துடிப்பு
முகம் காணாமலேயே என்னை நேசித்தாய்
00
குரல் குணம் அறியும் முன்பே
தொப்புள் கொடியால் உணவு ஊட்டினாய்
துன்பம் வலியிலென் முதல் சொல்
துள்ளி விழும் அம்மா அம்மாவென்று
00
என் வளர்ச்சியின் இரகசியம் அம்மா
என் முதல் கவிதையும் அம்மா
உலகிலே முதல் தெய்வம் அம்மா
அன்னையருக்கு இன்ப வாழ்த்துகள்
00
வேதா. இலங்காதிலகம் - தென்மார்க்.- 8-5-2026 - சௌந்தரி வாசித்தார்.


         

செவ்வாய், 5 மே, 2026

584 (1084) நட்புச் சிகரனே!


   



    நட்புச் சிகரனே!

00

நெஞ்சக் கலசத்தின் சுடரே!

நெஞ்சுரம் பெருக்கும் இளவரசனே!

நெடுங்கடலாய் இசை பெருக்குபவனே!

காதல் இராகமெனும் கானமிசைப்பவனே !

குளிர் தென்றலாய் இதமளிப்பவனே!

00

நாளும் பொழுதும் உள்வாங்கும்

ஆளும் உணர்வு அமுதமாக

மூளுதலாக என்னுள் ஓங்கும்

மேளதாளமாகுமோ காதலின்

உண்மை நினைவின் பரிசுத்தம்!

00

அன்புக் கடலின் நவரசநோக்கே!

இன்பமாய் வசீகரித்து ஆசையில்

சுண்டியிழுக்குமோ! இரவும்

பகலும் பிரவாகமாய் அமுதமாய்

இறங்கும் இன்பமே! பாசதீரனே!

00

காதல் கவிச்சுடர்-வேதா. இலங்காதிலகம்.தென்மார்க்-5-5-2026


       


 

திங்கள், 4 மே, 2026

583 (1083) udakam - நிழல். சௌந்தரி போஸ்ட்

 

    



  நிழல். சௌந்தரி போஸ்ட் - my poem coming second reading

00
கண் விலகாது நிழலைப் பார்க்கிறேன்
கை நீட்டலாம் கதை பேச இயலாது
கண்ணாடியிலும் நீரிலும் தெரியும் உரு
காலின் கீழ் தானே சாய்ந்திருக்கும்.
00
ஒளித் தடுப்பின் மறுபுற இருட்டு நிழல்
களி தரும் மரநிழல் கவலையும் போக்கும்.
கவலையின் நிழல் மனதை வாட்டும்
துளி மகிழ்வும் முகத்தில் நிழலாகும்.
00
சந்தேக நிழல் துல்லியமாகத் தெரியும்
சூரியன் தவிர யாரால் நிழலை அழிக்கமுடியும்!
நிழலின் அருமை களைப்பில் தெரியும்
தீமை செய்வோருக்கும் நன்மை தரும் நிழல்.
00
நிழல் விழாத கோவில் கோபுரங்கள் நிறைய உண்டு.
இராஐராஐனின் கோபுரமும் ஒன்று
நிழலும் பொய் எல்லாம் பொய்
வெயிலுக்கு மட்டும் நண்பன்.
00
வேதா. இலங்காதிலகம். தென்மார்க்- 30-4-2026

2-5-2026 vaasiththaar.....Nanry 


https://www.facebook.com/sownthary.sivananthan/videos/952199984094597



         


வியாழன், 30 ஏப்ரல், 2026

582 (1082) Anchali....

 

   






    அஞ்சலி!....


அஞ்சலி செலுத்த விடுங்கள்!

சஞ்சலமான  குறுக்கீடு ஏன்!

அஞ்ஞான  மனிதராய்  மாற்றமேன்!

எஞ்சுதல் உலகில் எதுவாகும்!

எஞ்ஞான்றும் கருணையை  ஏந்துங்கள்.!

கஞ்சமாகாதீர்கள் அன்பை  அளிக்க

அஞ்சலி உங்களுக்காகும் போது

விஞ்சுதல் உங்கள் மௌனம் தானே!


கவியூற்று -வேதா. இலங்காதிலகம்-தென்மார்க்- 30-4-2026



        


செவ்வாய், 28 ஏப்ரல், 2026

581 (1081) மாண்புறு மானுடராகவின்றி எல்லாம் மாறிவிட்டது

 



     



       மாண்புறு மானுடராகவின்றி

எல்லாம் மாறிவிட்டது

00

ஆண்டுப் பிரகாரப் பதிவல்ல

ஆதியில் பின்பற்றிய பழக்கம்

இணைய -மின்னஞ்சல்- தொலைபேசி

இன்ஸ்ரா -வாட்ஸ் அப்- எக்ஸ்

இன்னும் பலப்பல! மக்களுக்கு

எதிலும் திருப்தி   இல்லையோ!

00

எதிலும்   நிலைப்பதுமில்லை  இணைவதுமில்லை

உதாசீனம் வேணுமென்று  செய்வதும்

உடல்  நலம்   இழந்தாலும்

குலம் மீறிய குணமாக

பலவீனமாய்  மௌனிப்பதும்

நிலம்  கடந்தும் நிலைமாறுகிறது.

00

மனித விதிமுறை விழுமியங்களோடு

வனிதமாக நடக்காது   சஞ்சலித்து

வில்லங்கமாகப் பச்சோந்தி மானுடராவது

வீணான பலவீன நிலையோ!

காயங்கள் கொடுக்கும் ஆட்சியால்

சாயங்கள்  வெளுப்பது நிலையோ!

00

கவிஞர் திலகம். வேதா. இலங்காதிலகம். தென்மார்க்.28-4-2026



     



ஞாயிறு, 26 ஏப்ரல், 2026

580 (1080) Anchaly gnanam...

 

    






  இன்று  26-4-2026 தமிழ் வான் அவையில் வாசித்தேன்.


(ஞானாசாரியன் - மெய்யறிவு புகட்டும் ஆசான்

ஞானநாயகன் - இறைவன்.

ஞானசரிதன் - ஞானநெறியில் ஒழுகுபவன்.

ஞானசுகம் - இறைவனோடு கலந்த பேரின்ப மகிழ்ச்சி.

ஞானப்புதல்வர்- மாணாக்கர்.)

00

ஞானசேகரன் ஞானசுகம் பெறட்டும்!

00

ஞானம் இதழும் தலைவரும்

ஞானாசாரியனாக இருந்ததும்

ஞானப் புதல்வராக நாமிருந்தோம்.

ஞானநாயகன் ஏனவரை அழைத்தான்!

ஞானசரீரம் அழிந்தாலும்

ஞானோதயத்தை வளர்ப்போம்.

00

மறைவு கேட்டுத் துயரடைந்தேன்.

கண்கள் பனிக்கத் திகைத்தேன்.

என் பல கவிதைகள் ஞானம்

இதழில் அரங்கேறியது மகிழ்ந்தேன்

ஞானசரிதன் ஞானசுகம் பெறட்டும்!

அவரது ஆத்மா  சாந்தி பெறட்டும்!

00

இலக்கிய சந்திப்பில் தென்மார்க்கில்

இனிய ஒருங்கிணைப்பு   2015ல்

முகநூலில் நிழல் படங்கள் காணலாம்.

இறைவனுக்கு நன்றி பொன் தருணத்திற்கு.

00

வேதா. இலங்காதிலகம்.தென்மார்க். 2026- 4-


     



வெள்ளி, 24 ஏப்ரல், 2026

579 (1079) அம்மா

 

 

    





     அம்மா

00


விருப்பு வெறுப்பற்ற கருப்பொருளாம் உன்

உருத்தான பாலைத் தந்து மெதுவாய்

கருத்தோடு தூங்க வைப்பாய்

அருமை அம்மா அம்மா

00

உன்னைப் பின்னும் வாழ்வின்

சின்ன மழலை நான்.

கண்ணும் கருத்தாய்க் கவனிக்கலாம்

எண்ணம் நல்லதாய் இயங்கட்டும்

00

நிலையில்லா வாழ்வில்

நிரந்தரத் துணையாய்

நிறைந்தாயே அம்மா

நிம்மதி   நீயே  அம்மா!

00

கவி வித்தகர்  வேதா. இலங்காதிலகம். தென்மார்க்-24-4-2026


       




ஞாயிறு, 19 ஏப்ரல், 2026

578 (1078) சான்றிதழ்க் கவிதை... குயில்களின் கூடாரம்

 


      



 சான்றிதழ்க் கவிதை...

குயில்களின் கூடாரம் - சிறப்புக் கவிதைத் தலைப்பு
அவள் பெயர் வலிமை
00
இவள் அழகான திண்மை வீராங்கனை
எவளையும் சுய ஆளுமையால் வென்றிடுவாள்
துவளுதல் இன்றிக் கடமை செய்வாள்
துணிந்த மகள் தான் வீட்டரசி!
துள்ளும் மனதால் கலை கலாச்சாரம்
துடிப்புடன் பழக்குவாள் தன் பிள்ளைகளுக்கு
துலாபாரமாய்த் தாங்கும் சாயாத சக்தியாள்
துர்க்கை அவள் பெயர் வலிமை!
துயரின்றிக் கண்ணகியாய் நீதி கேட்பாள்
துலக்கமுடன் வல்லினமாய் வாகை சூடுவாள்
00
வேதா. இலங்காதிலகம்-தென்மார்க் -6-3-2026



வியாழன், 16 ஏப்ரல், 2026

577 (1077) பிரியம் எங்கே!

 

      

   



 பிரியம் எங்கே!


(அற்றம் -  அழிவு.  இறும்பூதை  - மகிழ்ச்சி  ) 


சுற்றிவர எத்தனை இற்றுப் போன நடத்தைகள்!

அற்றம்  அற்புதம்  பிரியங்கள்   எங்கே!


சிறகு ஒடிந்ததா! அன்பு தெரியாத உலகில்

அதைப்பற்றிப்   பேசாதே மனக்குடிலை மூடு!


ஆணவ மேலாடை   இறும்பூதை அழிக்க

அதிமேதாவித்தனத்தால் கௌரவ சிந்தனை அழியும்.


கவிநட்சத்திரம் -வேதா. இலங்காதிலகம். தென்மார்க்.  16-4-2026



       


புதன், 15 ஏப்ரல், 2026

576 (1076) நிழலின் கையை பிடிக்கிறோம்....

 

       


         நிழலின் கையை பிடிக்கிறோம்....


(வடிகட்டும் மனது - சாரத்தைத் திரட்டும் மனது)


நிழலின் கையைப் பிடிக்க எண்ணினேன்

சூரியனை முகில் மறைக்க  மறைந்தது.

மனதை மாற்றும் எழுத்து  எங்கே

மனிதரை மாற்றுகிறது!  வாசிப்பதே இல்லையே!

ஆடையும் உணவும் போதாது அறிவு 

அவசியம் என்று யார் நினைக்கிறார்!

00

வாழ்க்கை எல்லையுள் சுழி சுழியாக

வந்து போவது  இன்பம். எண்ணம்

வசப்படாது  கானல் நீராகிறது வண்ணமின்றி

வடிகட்டும் மனதில் வடியாது கண்ணீர்!

வலிமை மனதில் துளிர்க்கும்  நம்பிக்கை!

வேர்விட்டுக்  கிளைத்து மலர்ந்து பொலியும்.

00

செந்தணல்கவி - வேதா. இலங்காதிலகம். தென்மார்க் - 15-4-2026



      


செவ்வாய், 14 ஏப்ரல், 2026

575 (1075) new year..2026 மேகராசனின் ஒளி!.....

 

  




  மேகராசனின் ஒளி!.....

மேகசாரம்(கற்பூரம்) மேகசாலத்தால் - (முகில் கூட்டம்)
மேழியரும் -( உழவர்)
மேகராசனின் மேதகு ஒளி வர
மேகசாரம் ஏற்றியதாய் மேகசாலத்தால் வெளியானான்.
மேம்பாடுடை மானுடர் நீராடித் தயாரானார்.
மேழியரும் பால்சோறு படைக்கத் தயாரானார்.
00
மேம்பாடாகக் கதிரை விரித்தான் கதிரவன்
மாண்புடன் படையலைப் பகிர்ந்தனர் மாநிலத்தில்
மங்கையர் மலர்சூடி மழலையோடு மகிழ
மணக்கும் புத்தாடையில்குழந்தைகள் குதித்தனர்.
00
மாக்கோலம் சுவைத்த சிறுபூச்சிகள் மகிழ
மண்டலத்துப் பாதியினர் போரினால் துன்புற
மோகப் புகழால் அதிகாரம் எழுந்து
உலகத்தை வேதனையில் முக்குளிக்க வைக்கிறது.
00
கவிச்சுடர். வேதா. இலங்காதிலகம்.தென்மார்க். 14-4-2026




சனி, 11 ஏப்ரல், 2026

574 (1074) சுயநலங்களால் நிகழும் உலகு

 

     


 

  சுயநலங்களால் நிகழும் உலகு

00

தன்னைத் தானே புளுகும் நிலை

சின்ன அறிவா  பெரும் அறிவா!

பின்னும் காந்த அறிவா!உலகம் 

என்ன சொல்லினும் உண்மை அல்ல

இன்ப மயமானது உலகல்ல பொய்யே!

00

அவரவர் சுயநலங்களால் உண்மை பங்கப் படுகிறது

சுயநலங்களால் நிகழும் உலகை எப்படிப் பார்க்கிறாய்!

எண்ணங்களின் மொத்தத் தொகுப்பே மனம்

உள்ளம் வசமானால் உலகும் வசமாகும்

எம் மதிப்பீடு எம் இதயமளவில் தான்

00

மனிதன் தன் இருப்பை   விட்டு

மற்றதை மட்டும் கவனிக்கும் போது

தமது போக்கைச் சரி செய்ய வேண்டும்

தமது உண்மை உறவை நினைக்க வேண்டும்

மனவெளியை நஞ்சின்றிப் பாதுகாக்க வேண்டும்

00

நம் பலவீனமே நமக்குத் துன்பமாகிறது.

ஆம் பிறர் பாராட்டு அங்கீகாரத்திற்கு

காத்திருப்பது அடிமைத்தனம் என்கிறார் விவேகானந்தர்.

உன்னை நீயே வேதனைப் படுத்தாதே

இன்பமாய் வாழப் பழகு!

00

கனல்கவி - வேதா. இலங்காதிலகம் -தென்மார்க் - 11-4-2026



       




588 (1088) மாயக் காலம்.

            மாயக் காலம். 00 (கேலம் -விளையாட்டு. சாலகம் - சிலந்திவலை. தாலம் -பனைமரம். நாலா - பள்ளத் தாக்கு.) 00 காலம் ஒரு நீண்ட கனவு ஆலம் ...