மாயக் காலம்.
மாயக் காலம்.
https://www.facebook.com/sownthary.sivananthan/videos/1678801443274002
குடும்பம்.
(சௌந்தரி வானொலி அவுஸ்திரேலியா. முதலாவதாக வாசிக்கிறார் எனது கவிதை)
தாரதம்மிய( ஏற்றத் தாழ்வு.) உலகு
00
தாய்நாட்டிலும் அயல் நாட்டிலுமேன்
தாரதம்மியமற்ற உலகிலும் இலஞ்சம்
தரித்திரமான கொலை கொள்ளை நம்பிக்கைத் துரோகம்.
தனத்திற்காகப் பண்பை எறியும் பாதகர்கள்.
00
மானம் இழக்க விரும்பாத தன்மானிகள்
மறுபுறம் மாயவேடமிடும் மாட்சிமையற்றவர்.
பூவிரித்த பாதையில் பாடி ஆடுதலல்ல
பூலோகம்- அது நெருப்பில் நடப்பது.
00
கானல் நீர் வாழ்வு தானுலகு
கனவுக் கன்னியர் கையில் புரள்வதல்ல
தூவானம் என்றும் பெருமழையாகாது
வெற்றி என்பதும் பூவாணம் விடுவதல்ல
00
நம்பிக்கையில் காலூன்றி நிமிர்ந்து பார்!
உன் சொந்த எண்ணத்தில் எழு!
விடம் கக்கும் நட்புகளைத் தள்ளு!
விரிந்த உலகில் உயர வழியுண்டு!
00
பணம் புரட்டும் பதவி நாடகம்
பாரையே கேவலமாக்குகிறது
பாகுபாடின்றிப் பாக்கியசாலியாய்ப் பாசாங்கின்றி
பாதம் எடுத்து வைத்து முன்னேறு!
00
கவித்திலகம் வேதா. இலங்காதிலகம். தென்மார்க்- 12-5-2026
https://www.facebook.com/sownthary.sivananthan/videos/2133299903912370
அம்மா!.... ( சௌந்தரி ATBC radio)
நட்புச் சிகரனே!
00
நெஞ்சக் கலசத்தின் சுடரே!
நெஞ்சுரம் பெருக்கும் இளவரசனே!
நெடுங்கடலாய் இசை பெருக்குபவனே!
காதல் இராகமெனும் கானமிசைப்பவனே !
குளிர் தென்றலாய் இதமளிப்பவனே!
00
நாளும் பொழுதும் உள்வாங்கும்
ஆளும் உணர்வு அமுதமாக
மூளுதலாக என்னுள் ஓங்கும்
மேளதாளமாகுமோ காதலின்
உண்மை நினைவின் பரிசுத்தம்!
00
அன்புக் கடலின் நவரசநோக்கே!
இன்பமாய் வசீகரித்து ஆசையில்
சுண்டியிழுக்குமோ! இரவும்
பகலும் பிரவாகமாய் அமுதமாய்
இறங்கும் இன்பமே! பாசதீரனே!
00
காதல் கவிச்சுடர்-வேதா. இலங்காதிலகம்.தென்மார்க்-5-5-2026
நிழல். சௌந்தரி போஸ்ட் - my poem coming second reading
2-5-2026 vaasiththaar.....Nanry
https://www.facebook.com/sownthary.sivananthan/videos/952199984094597
அஞ்சலி!....
அஞ்சலி செலுத்த விடுங்கள்!
சஞ்சலமான குறுக்கீடு ஏன்!
அஞ்ஞான மனிதராய் மாற்றமேன்!
எஞ்சுதல் உலகில் எதுவாகும்!
எஞ்ஞான்றும் கருணையை ஏந்துங்கள்.!
கஞ்சமாகாதீர்கள் அன்பை அளிக்க
அஞ்சலி உங்களுக்காகும் போது
விஞ்சுதல் உங்கள் மௌனம் தானே!
கவியூற்று -வேதா. இலங்காதிலகம்-தென்மார்க்- 30-4-2026
மாண்புறு மானுடராகவின்றி
எல்லாம் மாறிவிட்டது
00
ஆண்டுப் பிரகாரப் பதிவல்ல
ஆதியில் பின்பற்றிய பழக்கம்
இணைய -மின்னஞ்சல்- தொலைபேசி
இன்ஸ்ரா -வாட்ஸ் அப்- எக்ஸ்
இன்னும் பலப்பல! மக்களுக்கு
எதிலும் திருப்தி இல்லையோ!
00
எதிலும் நிலைப்பதுமில்லை இணைவதுமில்லை
உதாசீனம் வேணுமென்று செய்வதும்
உடல் நலம் இழந்தாலும்
குலம் மீறிய குணமாக
பலவீனமாய் மௌனிப்பதும்
நிலம் கடந்தும் நிலைமாறுகிறது.
00
மனித விதிமுறை விழுமியங்களோடு
வனிதமாக நடக்காது சஞ்சலித்து
வில்லங்கமாகப் பச்சோந்தி மானுடராவது
வீணான பலவீன நிலையோ!
காயங்கள் கொடுக்கும் ஆட்சியால்
சாயங்கள் வெளுப்பது நிலையோ!
00
கவிஞர் திலகம். வேதா. இலங்காதிலகம். தென்மார்க்.28-4-2026
இன்று 26-4-2026 தமிழ் வான் அவையில் வாசித்தேன்.
(ஞானாசாரியன் - மெய்யறிவு புகட்டும் ஆசான்
ஞானநாயகன் - இறைவன்.
ஞானசரிதன் - ஞானநெறியில் ஒழுகுபவன்.
ஞானசுகம் - இறைவனோடு கலந்த பேரின்ப மகிழ்ச்சி.
ஞானப்புதல்வர்- மாணாக்கர்.)
00
ஞானசேகரன் ஞானசுகம் பெறட்டும்!
00
ஞானம் இதழும் தலைவரும்
ஞானாசாரியனாக இருந்ததும்
ஞானப் புதல்வராக நாமிருந்தோம்.
ஞானநாயகன் ஏனவரை அழைத்தான்!
ஞானசரீரம் அழிந்தாலும்
ஞானோதயத்தை வளர்ப்போம்.
00
மறைவு கேட்டுத் துயரடைந்தேன்.
கண்கள் பனிக்கத் திகைத்தேன்.
என் பல கவிதைகள் ஞானம்
இதழில் அரங்கேறியது மகிழ்ந்தேன்
ஞானசரிதன் ஞானசுகம் பெறட்டும்!
அவரது ஆத்மா சாந்தி பெறட்டும்!
00
இலக்கிய சந்திப்பில் தென்மார்க்கில்
இனிய ஒருங்கிணைப்பு 2015ல்
முகநூலில் நிழல் படங்கள் காணலாம்.
இறைவனுக்கு நன்றி பொன் தருணத்திற்கு.
00
வேதா. இலங்காதிலகம்.தென்மார்க். 2026- 4-
00
விருப்பு வெறுப்பற்ற கருப்பொருளாம் உன்
உருத்தான பாலைத் தந்து மெதுவாய்
கருத்தோடு தூங்க வைப்பாய்
அருமை அம்மா அம்மா
00
உன்னைப் பின்னும் வாழ்வின்
சின்ன மழலை நான்.
கண்ணும் கருத்தாய்க் கவனிக்கலாம்
எண்ணம் நல்லதாய் இயங்கட்டும்
00
நிலையில்லா வாழ்வில்
நிரந்தரத் துணையாய்
நிறைந்தாயே அம்மா
நிம்மதி நீயே அம்மா!
00
கவி வித்தகர் வேதா. இலங்காதிலகம். தென்மார்க்-24-4-2026
சான்றிதழ்க் கவிதை...
பிரியம் எங்கே!
(அற்றம் - அழிவு. இறும்பூதை - மகிழ்ச்சி )
சுற்றிவர எத்தனை இற்றுப் போன நடத்தைகள்!
அற்றம் அற்புதம் பிரியங்கள் எங்கே!
சிறகு ஒடிந்ததா! அன்பு தெரியாத உலகில்
அதைப்பற்றிப் பேசாதே மனக்குடிலை மூடு!
ஆணவ மேலாடை இறும்பூதை அழிக்க
அதிமேதாவித்தனத்தால் கௌரவ சிந்தனை அழியும்.
கவிநட்சத்திரம் -வேதா. இலங்காதிலகம். தென்மார்க். 16-4-2026
நிழலின் கையை பிடிக்கிறோம்....
(வடிகட்டும் மனது - சாரத்தைத் திரட்டும் மனது)
நிழலின் கையைப் பிடிக்க எண்ணினேன்
சூரியனை முகில் மறைக்க மறைந்தது.
மனதை மாற்றும் எழுத்து எங்கே
மனிதரை மாற்றுகிறது! வாசிப்பதே இல்லையே!
ஆடையும் உணவும் போதாது அறிவு
அவசியம் என்று யார் நினைக்கிறார்!
00
வாழ்க்கை எல்லையுள் சுழி சுழியாக
வந்து போவது இன்பம். எண்ணம்
வசப்படாது கானல் நீராகிறது வண்ணமின்றி
வடிகட்டும் மனதில் வடியாது கண்ணீர்!
வலிமை மனதில் துளிர்க்கும் நம்பிக்கை!
வேர்விட்டுக் கிளைத்து மலர்ந்து பொலியும்.
00
செந்தணல்கவி - வேதா. இலங்காதிலகம். தென்மார்க் - 15-4-2026
மேகராசனின் ஒளி!.....
சுயநலங்களால் நிகழும் உலகு
00
தன்னைத் தானே புளுகும் நிலை
சின்ன அறிவா பெரும் அறிவா!
பின்னும் காந்த அறிவா!உலகம்
என்ன சொல்லினும் உண்மை அல்ல
இன்ப மயமானது உலகல்ல பொய்யே!
00
அவரவர் சுயநலங்களால் உண்மை பங்கப் படுகிறது
சுயநலங்களால் நிகழும் உலகை எப்படிப் பார்க்கிறாய்!
எண்ணங்களின் மொத்தத் தொகுப்பே மனம்
உள்ளம் வசமானால் உலகும் வசமாகும்
எம் மதிப்பீடு எம் இதயமளவில் தான்
00
மனிதன் தன் இருப்பை விட்டு
மற்றதை மட்டும் கவனிக்கும் போது
தமது போக்கைச் சரி செய்ய வேண்டும்
தமது உண்மை உறவை நினைக்க வேண்டும்
மனவெளியை நஞ்சின்றிப் பாதுகாக்க வேண்டும்
00
நம் பலவீனமே நமக்குத் துன்பமாகிறது.
ஆம் பிறர் பாராட்டு அங்கீகாரத்திற்கு
காத்திருப்பது அடிமைத்தனம் என்கிறார் விவேகானந்தர்.
உன்னை நீயே வேதனைப் படுத்தாதே
இன்பமாய் வாழப் பழகு!
00
கனல்கவி - வேதா. இலங்காதிலகம் -தென்மார்க் - 11-4-2026
மாயக் காலம். 00 (கேலம் -விளையாட்டு. சாலகம் - சிலந்திவலை. தாலம் -பனைமரம். நாலா - பள்ளத் தாக்கு.) 00 காலம் ஒரு நீண்ட கனவு ஆலம் ...