நான் 1990 ல் இருந்து 1993 வரை படித்த செமினாறியக் கட்டிடம் இடித்து தொடர் மாடியாகக் கட்டி பலர் குடியிருக்கின்றனர். வாகனத்தில் போகும் போது இது நான் படித்த இடம் என்று சொன்னபடியே செல்வோம். தென்மார்க்கில் எனக்கு ஒரு அந்தஸ்து தந்த இடம்.
கல்விக்கு ஏது வயது! – பெட்டகோ பட்டம்!
00
வில்லங்கப் போர் நிலையால்
அல்லல் தீருமென தாய்நாடு
இல்லம் விட்டு(இலங்கை) தென்மார்க்
எல்லையுள் வந்தோம் அகதிகளாக(1987)
00
இந்த நாட்டு மொழியை (தேனிஸ்)
சொந்தமெனப் படித்தோம் முன்னேறினோம்.
நாற்பத்திமூன்று வயதில் செமினாறியம்
பாலர் பராமரிப்புக் கல்வியில்.
00
மூன்று வருடப் படிப்பிற்கு
அனுமதிப் பத்திரம் கையில்
எல்லையில்லா மகிழ்வில் சிறகடிப்பு
தொல்லையுடன் முயற்சி ஏணியில்
00
1993ல் பெட்டகோ பட்டம் கையில்
முதல் இலங்கைத் தமிழிச்சியாக
கைகூடிய பெருமை சமூகத்தில்
கைப்பொருளான கல்வியுடன் கவிதையும்
00
நூலாக்கம் - வானொலியில் குரல்
நுண்ணறிவுடன் தொலைக்காட்சியிலும்
செய்தி வாசிப்பாய்க் காலம் நகர்ந்தது
கவிதைகளும் காற்றில் ஊடாடியது
00
பட்டம் பெற விசேட ஆடைத்
திட்டம் தென்மார்க்கில் இல்லை.
திகைப்பானது இதை அறிந்திட
திண்ணம் நாம் பட்டதாரிகளே!
00
ஓய்வுநிலைப் பெட்டகோ - வேதா. இலங்காதிலகம்- தென்மார்க் - 6-7-2026
















