https://www.facebook.com/sownthary.sivananthan/videos/10158887180723984/
புகழைத் தேடி.....
புகழ் ஒரு மாயை
அகழ்ந்து ஏந்தவே விரும்புவார்
மகிழ்ந்திட ஒரு மதிப்பு
முகிழ்ந்து வரும் சிறப்புடன்!
புகழைத் தேடியா வள்ளுவர்
மகிழ்ந்து எழுதினார் திருக்குறள்!
நெகிழ்நத மரியாதை மகிமை
அமிழ்ந்திடாது உயர்ந்தது உண்மை!
வாய்ப்பு வாசலில் கோலமிட்டால்
ஆய்வின்றி வாகுடன் பயனாக்கினாலும்
ஏயப்பவரும் சாய்ப்பவரும் பலருளர்.
மாய்ந்திடாது சாதித்திடு! சாதனையேயுயர்வு!
புகழைத் தேடு! ஆனால்
மகிழ்வற்ற பொறாமை மகுடமிடும்!
துகிலுரியும் பாராட்டு! கவனம்!
தெளிவான நிதானம் வேண்டும்!
புகழ் முடக்கு வாதம்!
மகிழச் செய்யம் பேய்!
தமிழென் புகழைச் சொல்லுமா!
உமிழ்கிறேன் என் வரிகளை.
10-7-2020