உரிமையற்ற விருந்தாளி....
00
தன்னம்பிக்கை, முயற்சியால் தகவுறும்
நன்னம்பிக்கை அன்பால் உயர்வுறும்
என்ன நிலையிலும் நெஞ்சத்தை
வன்மை வஞ்சக அரண்மனையாக்காதே!
00
ஞானக் கலப்பையற்று உழுதால்
வானமேகாது சுடுகின்ற யதார்த்தங்கள்
ஆனந்தமாக வாழத் தெரியாவிட்டால்
அது மாபெரும் குற்றம் தான்.
00
அறிவுத் திமிர் அளவானால்
செறிவாகாது வயிற்றெரிச்சல் குணம்.
ஏறிந்திடு ஆதிக்கத் திமிரை!
வறிய நிலையாக்கு போர்க்குணத்தை
00
பொறாமை நிறைந்து பொசுங்காதே!
உறாதவனாயின்றி (பகை நட்பு இல்லாதவன்) அன்பை நிறை!
சிறாம்புதல் (உராய்தல், பிறாண்டுதல்) தவிர்! சிவமயமாகு!
விறாட்டியாகாதே! ஆதரவில் இளகு!
00
அறிவு பூர்வமானது நற்சிந்தனை
முறியும் கெட்ட சிந்தனை உணர்வுபூர்வமானது
எறிந்திடு உரிமையற்ற விருந்தாளி வயிற்றெரிச்சலை!
வெறியுடைய எதிமலைக் குளம்பு அது!
00
29-7-2021