ஞாயிறு, 25 ஜூலை, 2021

352. ( 915) குறையால் நிறை அழிகிறது

 




குறையால் நிறை அழிகிறது

00

நன்கு தூங்கினால் இருளை

வென்ற தடமழியும். துன்புறுத்தும்

சிறுமனம் முரணாகித் துரத்தினால்

தூக்கமும் தூரமுற்றுத் துயருறும்.

வாழ்வு, இடைஞ்சல், பொருளாதாரம்

ஆழ்தலாகும் நோவின் அழுத்தத்தில்

ஆழ்வார் பாசுரமும் ஆரோகணிக்காது.

ஆதரவும் அன்பும் அத்துவானமாகும்

00

நாட்களை வெறுமையாய் நகர்த்தாது

நிகழ்வுகளால் சருகை இழையை

நிதானமாய்ப் பின்னு! இன்பித்திரு!

நிரந்தரமற்ற வாழ்வைத் துன்பமாக்காதே!

வலி தாங்க முடியாவிடிலும் 

கிலி பிறருக்குக் கொடுக்காதே!

மலிவான பிறவியாகி எதற்குப்

பலியாக்குகிறாய் பிறர் அமைதியை!

00

மனது வேண்டும் விதம்

ஆனந்தமான ஆன்ம ஒவியம்

எதிர்கால இரகசியம் தெரியாது

எதுவென விரல்கள் பின்னிட மகிழ்ந்திரு!

நிறை அழிகிறது குறையால்.

சிறை உடைத்து மனக்

கறை துடைக்கும் கதிர்

இறை நம்பிக்கை நம்பு

00

12-7-2021







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு