மாயக் காலம்.
மாயக் காலம்.
https://www.facebook.com/sownthary.sivananthan/videos/1678801443274002
குடும்பம்.
(சௌந்தரி வானொலி அவுஸ்திரேலியா. முதலாவதாக வாசிக்கிறார் எனது கவிதை)
தாரதம்மிய( ஏற்றத் தாழ்வு.) உலகு
00
தாய்நாட்டிலும் அயல் நாட்டிலுமேன்
தாரதம்மியமற்ற உலகிலும் இலஞ்சம்
தரித்திரமான கொலை கொள்ளை நம்பிக்கைத் துரோகம்.
தனத்திற்காகப் பண்பை எறியும் பாதகர்கள்.
00
மானம் இழக்க விரும்பாத தன்மானிகள்
மறுபுறம் மாயவேடமிடும் மாட்சிமையற்றவர்.
பூவிரித்த பாதையில் பாடி ஆடுதலல்ல
பூலோகம்- அது நெருப்பில் நடப்பது.
00
கானல் நீர் வாழ்வு தானுலகு
கனவுக் கன்னியர் கையில் புரள்வதல்ல
தூவானம் என்றும் பெருமழையாகாது
வெற்றி என்பதும் பூவாணம் விடுவதல்ல
00
நம்பிக்கையில் காலூன்றி நிமிர்ந்து பார்!
உன் சொந்த எண்ணத்தில் எழு!
விடம் கக்கும் நட்புகளைத் தள்ளு!
விரிந்த உலகில் உயர வழியுண்டு!
00
பணம் புரட்டும் பதவி நாடகம்
பாரையே கேவலமாக்குகிறது
பாகுபாடின்றிப் பாக்கியசாலியாய்ப் பாசாங்கின்றி
பாதம் எடுத்து வைத்து முன்னேறு!
00
கவித்திலகம் வேதா. இலங்காதிலகம். தென்மார்க்- 12-5-2026
https://www.facebook.com/sownthary.sivananthan/videos/2133299903912370
அம்மா!.... ( சௌந்தரி ATBC radio)
நட்புச் சிகரனே!
00
நெஞ்சக் கலசத்தின் சுடரே!
நெஞ்சுரம் பெருக்கும் இளவரசனே!
நெடுங்கடலாய் இசை பெருக்குபவனே!
காதல் இராகமெனும் கானமிசைப்பவனே !
குளிர் தென்றலாய் இதமளிப்பவனே!
00
நாளும் பொழுதும் உள்வாங்கும்
ஆளும் உணர்வு அமுதமாக
மூளுதலாக என்னுள் ஓங்கும்
மேளதாளமாகுமோ காதலின்
உண்மை நினைவின் பரிசுத்தம்!
00
அன்புக் கடலின் நவரசநோக்கே!
இன்பமாய் வசீகரித்து ஆசையில்
சுண்டியிழுக்குமோ! இரவும்
பகலும் பிரவாகமாய் அமுதமாய்
இறங்கும் இன்பமே! பாசதீரனே!
00
காதல் கவிச்சுடர்-வேதா. இலங்காதிலகம்.தென்மார்க்-5-5-2026
நிழல். சௌந்தரி போஸ்ட் - my poem coming second reading
2-5-2026 vaasiththaar.....Nanry
https://www.facebook.com/sownthary.sivananthan/videos/952199984094597
மாயக் காலம். 00 (கேலம் -விளையாட்டு. சாலகம் - சிலந்திவலை. தாலம் -பனைமரம். நாலா - பள்ளத் தாக்கு.) 00 காலம் ஒரு நீண்ட கனவு ஆலம் ...