திங்கள், 18 மே, 2026

588 (1088) மாயக் காலம்.

 

       


 மாயக் காலம்.

00
(கேலம் -விளையாட்டு. சாலகம் - சிலந்திவலை.
தாலம் -பனைமரம். நாலா - பள்ளத் தாக்கு.)
00
காலம் ஒரு நீண்ட கனவு
ஆலம் விழுதாக நீளும்
ஓலமிடும் அலையாகும்
பலகேலமும் ஆகும்.
கோலமாகி மகிழ்வு தரும்.
சாலகமாகி பின்னலிடும்.
தாலம் போல உயரும்.
நாலாவாகவும் ஆழமாகும்.
00
மாயச்சொல் காலம்.
மரத்தில் வரையாக கணக்கிடும்.
முதியோர் மௌனம் உடைக்கும்.
முகிழ்ந்து மனதில் குமிழியாகும்.
முக்காலம் என்ற பிரிவில்
மயிலிறகு தடவும் இன்பமாயும்
கவிதை வாசிப்பிலும் கரைகிறது காலம்.
காலத்தால் எதுவும் முடியும்.(நாள் செய்வது நல்லோர் செய்யார்)
00
பாடசாலை மணியும் கல்வியும்
காத்திருத்தலும் பெறுமதிக் காலமே.
தொடர்பு - தொந்தரவு- எதிர்பார்ப்பற்றது.
தூக்கம் கொடுப்பதும் கெடுப்பதும்
துயரை மறக்கடிப்பதும் காலமே.
காலம் ஊமை தான்.
பெற்றவர் நினைவை மறக்கடிக்காது.
காலமறிந்து பயிர் செய்யணும்.
00

முத்தமிழ் தாரகை – வேதா. இலங்காதிலகம் -தென்மார்க். 18-5-2026




ஞாயிறு, 17 மே, 2026

587 (1087) uudakam.... ATBC radio KUDUMpam

 

      https://www.facebook.com/sownthary.sivananthan/videos/1678801443274002

        


 குடும்பம்.

 (சௌந்தரி வானொலி அவுஸ்திரேலியா. முதலாவதாக வாசிக்கிறார் எனது கவிதை)

00
குடும்பம் ஒரு கதம்பம்.
ஒடுங்காத சமூக அமைப்பு.
நடுங்காத பாதுகாப்பு அரண்.
பிடுங்கல் பிக்கலற்ற இணைப்பு.
00
அன்பைக் கொடுத்து எடுக்கும்
இன்ப சொர்க்கம் பிரிவற்றதானால்.
மன்பதையின் மலர்விரியும் நந்தவனம்.
முன்னேறும் சமூகத்தின் கல்வியகம்.
00
தந்தை தாய் சகோதரமென
சிந்தை கவரும் உறவுகள்.
விந்தையான கவிதைச் சிகரங்கள்.
உந்து விசையான ஊன்றுகோல்கள்.
00
பெறற்கரிய மழலைச் செல்வங்களால்
திறனுடைய பெருவிருட்சமாகிறது.
சிறகுகள் ஒன்றையொன்று அணைக்கும்
நிறமுடைய அன்பிங்கு உரம்.
00
ஒற்றுமை தியாகம் விட்டுக்கொடுத்தல்
இற்றுவிடாத உயர் குணங்கள்.
பற்றுமிக்கத் திடமானது குடும்பம்.
பாசதீபம்- பல்கலைக்கழகம் -கடவுளின் பரிசு
00
கவியருவி - வேதா. இலங்காதிலகம்.தென்மார்க். 13-5-2026


    

         

செவ்வாய், 12 மே, 2026

586 (1086) தாரதம்மிய( ஏற்றத் தாழ்வு.) உலகு 00

 

    

      



  தாரதம்மிய( ஏற்றத் தாழ்வு.) உலகு   

00

தாய்நாட்டிலும் அயல் நாட்டிலுமேன்

தாரதம்மியமற்ற உலகிலும் இலஞ்சம்

தரித்திரமான கொலை கொள்ளை நம்பிக்கைத் துரோகம்.

தனத்திற்காகப்  பண்பை எறியும் பாதகர்கள்.

00

மானம் இழக்க விரும்பாத தன்மானிகள்

மறுபுறம் மாயவேடமிடும் மாட்சிமையற்றவர்.

பூவிரித்த பாதையில் பாடி ஆடுதலல்ல

பூலோகம்- அது நெருப்பில் நடப்பது.

00

கானல் நீர்  வாழ்வு தானுலகு

கனவுக் கன்னியர் கையில் புரள்வதல்ல

தூவானம் என்றும் பெருமழையாகாது

வெற்றி என்பதும் பூவாணம் விடுவதல்ல

00

நம்பிக்கையில் காலூன்றி நிமிர்ந்து பார்!

உன் சொந்த எண்ணத்தில் எழு!

விடம் கக்கும் நட்புகளைத் தள்ளு!

விரிந்த உலகில் உயர வழியுண்டு!

00

பணம் புரட்டும் பதவி நாடகம்

பாரையே கேவலமாக்குகிறது

பாகுபாடின்றிப் பாக்கியசாலியாய்ப் பாசாங்கின்றி

பாதம் எடுத்து வைத்து முன்னேறு!

00

கவித்திலகம்  வேதா. இலங்காதிலகம். தென்மார்க்- 12-5-2026


     




சனி, 9 மே, 2026

585 (1085) uudakam...ATBC radio - amma

 




     

     https://www.facebook.com/sownthary.sivananthan/videos/2133299903912370


     அம்மா!.... ( சௌந்தரி ATBC radio)

00
உன் முகம் பார்த்தேன் முதலில்
மென் கன்னம் இணைந்தது உடனே
சின்னக் கரங்கள் தொட்டது மெதுவாய்
அன்பாய் அணைத்தாய் உன் மார்பிலே
00
அம்மாவின் வாசனை வசமாய் இழுத்தது
அகப்பட்டது அமுதமான தாய்பால்
ஆனந்தித்து அருந்திட அருகில் வந்தார்
ஆசை முத்தம் தந்தார் அப்பா
00
முதல் ஆசிரியை நீ உலகை
முழுதாய் அறிந்தேன் இருவரிடமும்
முதலிசை அம்மா உன் இதயத்துடிப்பு
முகம் காணாமலேயே என்னை நேசித்தாய்
00
குரல் குணம் அறியும் முன்பே
தொப்புள் கொடியால் உணவு ஊட்டினாய்
துன்பம் வலியிலென் முதல் சொல்
துள்ளி விழும் அம்மா அம்மாவென்று
00
என் வளர்ச்சியின் இரகசியம் அம்மா
என் முதல் கவிதையும் அம்மா
உலகிலே முதல் தெய்வம் அம்மா
அன்னையருக்கு இன்ப வாழ்த்துகள்
00
வேதா. இலங்காதிலகம் - தென்மார்க்.- 8-5-2026 - சௌந்தரி வாசித்தார்.


         

செவ்வாய், 5 மே, 2026

584 (1084) நட்புச் சிகரனே!


   



    நட்புச் சிகரனே!

00

நெஞ்சக் கலசத்தின் சுடரே!

நெஞ்சுரம் பெருக்கும் இளவரசனே!

நெடுங்கடலாய் இசை பெருக்குபவனே!

காதல் இராகமெனும் கானமிசைப்பவனே !

குளிர் தென்றலாய் இதமளிப்பவனே!

00

நாளும் பொழுதும் உள்வாங்கும்

ஆளும் உணர்வு அமுதமாக

மூளுதலாக என்னுள் ஓங்கும்

மேளதாளமாகுமோ காதலின்

உண்மை நினைவின் பரிசுத்தம்!

00

அன்புக் கடலின் நவரசநோக்கே!

இன்பமாய் வசீகரித்து ஆசையில்

சுண்டியிழுக்குமோ! இரவும்

பகலும் பிரவாகமாய் அமுதமாய்

இறங்கும் இன்பமே! பாசதீரனே!

00

காதல் கவிச்சுடர்-வேதா. இலங்காதிலகம்.தென்மார்க்-5-5-2026


       


 

திங்கள், 4 மே, 2026

583 (1083) udakam - நிழல். சௌந்தரி போஸ்ட்

 

    



  நிழல். சௌந்தரி போஸ்ட் - my poem coming second reading

00
கண் விலகாது நிழலைப் பார்க்கிறேன்
கை நீட்டலாம் கதை பேச இயலாது
கண்ணாடியிலும் நீரிலும் தெரியும் உரு
காலின் கீழ் தானே சாய்ந்திருக்கும்.
00
ஒளித் தடுப்பின் மறுபுற இருட்டு நிழல்
களி தரும் மரநிழல் கவலையும் போக்கும்.
கவலையின் நிழல் மனதை வாட்டும்
துளி மகிழ்வும் முகத்தில் நிழலாகும்.
00
சந்தேக நிழல் துல்லியமாகத் தெரியும்
சூரியன் தவிர யாரால் நிழலை அழிக்கமுடியும்!
நிழலின் அருமை களைப்பில் தெரியும்
தீமை செய்வோருக்கும் நன்மை தரும் நிழல்.
00
நிழல் விழாத கோவில் கோபுரங்கள் நிறைய உண்டு.
இராஐராஐனின் கோபுரமும் ஒன்று
நிழலும் பொய் எல்லாம் பொய்
வெயிலுக்கு மட்டும் நண்பன்.
00
வேதா. இலங்காதிலகம். தென்மார்க்- 30-4-2026

2-5-2026 vaasiththaar.....Nanry 


https://www.facebook.com/sownthary.sivananthan/videos/952199984094597



         


588 (1088) மாயக் காலம்.

            மாயக் காலம். 00 (கேலம் -விளையாட்டு. சாலகம் - சிலந்திவலை. தாலம் -பனைமரம். நாலா - பள்ளத் தாக்கு.) 00 காலம் ஒரு நீண்ட கனவு ஆலம் ...