சனி, 30 மே, 2026

591 (1091) வெற்றியும் தோல்வியும்

 

         


         வெற்றியும் தோல்வியும்


(மதுகை - அறிவு- வலிமை.)

00

மங்காத மதுர அனுபவங்கள்

தாங்கிடும் கைத்தடியன்றோ  வாழ்வில்!

அங்கம் முதுமை பெற 

மங்குவது இளமை தானே!

தங்கமாவது மதுகையன்றோ!

00

வெற்றியும் தோல்வியும் நம் மனநிலையே

வெற்றியெம் காலடியில் தோல்வியை ஒதுக்கினால்

பற்றின்றித் தானாகவே உதிரும்

ஒற்றிக் கொள்ளும் கவலையிது உண்மை.

கற்றுத் தருவது இயற்கை தான்.

00

இடைவெளி கொடு!  வளர்வாய்.

தடையின்றி உயர்ச்சி மெதுவாய் நடக்கும்

விடை சரிதானென்ற கணிப்பால்

எடையற்ற மனமடைவாய் இதுவும் உண்மை.

நடைதொடர நன்மை வளரும்!

00

கவி அரசி -வேதா. இலங்காதிலகம்-தென்மார்க்- 30-5-2026


        



செவ்வாய், 26 மே, 2026

590 (1090) ஒரு நாள் பயணம் 24-5-2026 00

 

     



ஒரு நாள் பயணம் 24-5-2026

00
நான்கு சுவர்களுக்குள்ளிருந்து
கட்டிடக்காட்டை விலத்தியொரு
நீண்ட தூரப் பயணம்
மகன் பெயரன்கள் கணவருடன்
00
மலர்தலான உணர்வு சுற்றுலா
மனதில் அழியாத கோலம்
கடலுக்குள் பாதை அது
கவிதைகளோடு பேசும்.
00
மகிழுந்துப் பயணம் இயற்கையழகோடு
முழுவதுமாய் ஊஞ்சலாடும்- உணர்வு
மயமான இன்பம் பொங்கியது.
உலாவும் உடற் பயிற்சி.
00
மனதிற்கு நன் மருந்தாகும்
புத்துணர்வு பெறும் பயணம்.
இன்றியமைந்த ஒரு பாகம் பயணம்
வாழ்வும் ஒரு பயணமே.
00
டென்மார்க் நாடானது தீபகற்பம் ஜட்லாந்து மற்றும் 407 தீவுகளை உள்ளடக்கிய தீவுக்கூட்டம் உள்ளடக்கிக் காணப்படுகின்றது. ஆனாலும் மக்கள் 70 தீவுகளிலேயே வசித்து வருகின்றனர். டென்மார்க் 1973ல் இருந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் முன்னதாக ஐரோப்பிய பொருளாதாரக் கூட்டமைப்பு) அங்கமாக இருந்து வருகிறது.
நாங்கள்யுலாண்ட் தீவிலிருந்து பியுன் தீவால் சேலாண்ட் தீவு சென்று பின் பல்ஸ்ரர் தீவால் நிக்குபிங் சென்றோம். 3 பாலங்கள் கடந்து- ( ஸ்ரோவ பெல்ட்-லீல பெல்ட –பல்ஸ்ரர்) சென்றோம். படத்தில் தெரிகிறது.
காலை எட்டரைக்குப் புறப்பட்டு மாலை பத்து மணிக்கு வீடு வந்தோம்.
வேதா. இலங்காதிலகம்- தென்மார்க்.- 26-5-2026






சனி, 23 மே, 2026

589 (1089) uudakam ATBC .australia -pitivu


     


        https://www.facebook.com/sownthary.sivananthan/videos/1528377608684402

( அவுஸ்திரேவிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்)
பிரிவு
( 3rd poem. is mine .sownthary reading)
ஓன்று பலவாதலும்
அன்றி தனிமையாதலும்
அன்பின்றி பரிவின்றி விலகுதலும்
துன்பம் சிலவேளை இன்பமாகும்.
ஓசையற்ற மௌனமும் பிரிவுதான்
பசையற்ற பூவும் காம்புமாய்.
00
பிரிவை ஏற்கும் மன தைரியம்!
உரியாத திட நம்பிக்கை!
சரியான பாதையைக் காட்டும்!
தரிப்பிடம் வெகு நலமாகும்
சிரிப்பு அச்சுறுத்தலின்றித் தொடரும்.
பிரிவால் உதிரமும் மாறாது.
00
கல்வியால் பொருளீட்டலால் நேரும்
நல்ல பிரிவு நன்மை பெருக்கும்.
பொல்லாத போர் போர்த்தும் பிரிவு
அல்லல் தரும் அவலம் பெருக்கும்.
அல்லும் பகலும் வேதனை காதற்பிரிவு
அவச் சாவிற்கும் அழைப்பெடுக்கும்.
00
சரிவாகும் அன்பு ஆதரவு.
விரியவிடாது மானுடரை
எரிதல் மிகவாகும் அனலாக!
பிரிவு கொடுமை! பாலைவனமானது!
புரிதல் நிறைந்தால் பிரிவு இல்லை.
பிரிதல் குறைவாகும் அன்பு அளவானால்.
00
பிரிவில் கொடுமை குடும்ப உறவில்.
எதிர்பார்ப்புக் குறைந்தால்
பிரிவால் ஏமாற்றம் தவிர்க்கலாம்.
பிரபஞ்சம் என்பதே பிரிவும் இணைவும்.
மரத்தை வெட்டிப் பிரித்தால்
மழை எப்படி வரும்!
00
குறள் - உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.
மகிழும்படியாகக் கூடிப்பழகி இனி
எப்போது இவரைக் காண்போம் எனப்
பிரிதல் புலவரின் தொழிலாகும்
என்று திருவள்ளுவர் மொழிகிறார்.
00

வேதா. இலங்காதிலகம். தென்மார்க். - 1-5-2026  


        



          

திங்கள், 18 மே, 2026

588 (1088) மாயக் காலம்.

 

       


 மாயக் காலம்.

00
(கேலம் -விளையாட்டு. சாலகம் - சிலந்திவலை.
தாலம் -பனைமரம். நாலா - பள்ளத் தாக்கு.)
00
காலம் ஒரு நீண்ட கனவு
ஆலம் விழுதாக நீளும்
ஓலமிடும் அலையாகும்
பலகேலமும் ஆகும்.
கோலமாகி மகிழ்வு தரும்.
சாலகமாகி பின்னலிடும்.
தாலம் போல உயரும்.
நாலாவாகவும் ஆழமாகும்.
00
மாயச்சொல் காலம்.
மரத்தில் வரையாக கணக்கிடும்.
முதியோர் மௌனம் உடைக்கும்.
முகிழ்ந்து மனதில் குமிழியாகும்.
முக்காலம் என்ற பிரிவில்
மயிலிறகு தடவும் இன்பமாயும்
கவிதை வாசிப்பிலும் கரைகிறது காலம்.
காலத்தால் எதுவும் முடியும்.(நாள் செய்வது நல்லோர் செய்யார்)
00
பாடசாலை மணியும் கல்வியும்
காத்திருத்தலும் பெறுமதிக் காலமே.
தொடர்பு - தொந்தரவு- எதிர்பார்ப்பற்றது.
தூக்கம் கொடுப்பதும் கெடுப்பதும்
துயரை மறக்கடிப்பதும் காலமே.
காலம் ஊமை தான்.
பெற்றவர் நினைவை மறக்கடிக்காது.
காலமறிந்து பயிர் செய்யணும்.
00

முத்தமிழ் தாரகை – வேதா. இலங்காதிலகம் -தென்மார்க். 18-5-2026




ஞாயிறு, 17 மே, 2026

587 (1087) uudakam.... ATBC radio KUDUMpam

 

      https://www.facebook.com/sownthary.sivananthan/videos/1678801443274002

        


 குடும்பம்.

 (சௌந்தரி வானொலி அவுஸ்திரேலியா. முதலாவதாக வாசிக்கிறார் எனது கவிதை)

00
குடும்பம் ஒரு கதம்பம்.
ஒடுங்காத சமூக அமைப்பு.
நடுங்காத பாதுகாப்பு அரண்.
பிடுங்கல் பிக்கலற்ற இணைப்பு.
00
அன்பைக் கொடுத்து எடுக்கும்
இன்ப சொர்க்கம் பிரிவற்றதானால்.
மன்பதையின் மலர்விரியும் நந்தவனம்.
முன்னேறும் சமூகத்தின் கல்வியகம்.
00
தந்தை தாய் சகோதரமென
சிந்தை கவரும் உறவுகள்.
விந்தையான கவிதைச் சிகரங்கள்.
உந்து விசையான ஊன்றுகோல்கள்.
00
பெறற்கரிய மழலைச் செல்வங்களால்
திறனுடைய பெருவிருட்சமாகிறது.
சிறகுகள் ஒன்றையொன்று அணைக்கும்
நிறமுடைய அன்பிங்கு உரம்.
00
ஒற்றுமை தியாகம் விட்டுக்கொடுத்தல்
இற்றுவிடாத உயர் குணங்கள்.
பற்றுமிக்கத் திடமானது குடும்பம்.
பாசதீபம்- பல்கலைக்கழகம் -கடவுளின் பரிசு
00
கவியருவி - வேதா. இலங்காதிலகம்.தென்மார்க். 13-5-2026


    

         

செவ்வாய், 12 மே, 2026

586 (1086) தாரதம்மிய( ஏற்றத் தாழ்வு.) உலகு 00

 

    

      



  தாரதம்மிய( ஏற்றத் தாழ்வு.) உலகு   

00

தாய்நாட்டிலும் அயல் நாட்டிலுமேன்

தாரதம்மியமற்ற உலகிலும் இலஞ்சம்

தரித்திரமான கொலை கொள்ளை நம்பிக்கைத் துரோகம்.

தனத்திற்காகப்  பண்பை எறியும் பாதகர்கள்.

00

மானம் இழக்க விரும்பாத தன்மானிகள்

மறுபுறம் மாயவேடமிடும் மாட்சிமையற்றவர்.

பூவிரித்த பாதையில் பாடி ஆடுதலல்ல

பூலோகம்- அது நெருப்பில் நடப்பது.

00

கானல் நீர்  வாழ்வு தானுலகு

கனவுக் கன்னியர் கையில் புரள்வதல்ல

தூவானம் என்றும் பெருமழையாகாது

வெற்றி என்பதும் பூவாணம் விடுவதல்ல

00

நம்பிக்கையில் காலூன்றி நிமிர்ந்து பார்!

உன் சொந்த எண்ணத்தில் எழு!

விடம் கக்கும் நட்புகளைத் தள்ளு!

விரிந்த உலகில் உயர வழியுண்டு!

00

பணம் புரட்டும் பதவி நாடகம்

பாரையே கேவலமாக்குகிறது

பாகுபாடின்றிப் பாக்கியசாலியாய்ப் பாசாங்கின்றி

பாதம் எடுத்து வைத்து முன்னேறு!

00

கவித்திலகம்  வேதா. இலங்காதிலகம். தென்மார்க்- 12-5-2026


     




சனி, 9 மே, 2026

585 (1085) uudakam...ATBC radio - amma

 




     

     https://www.facebook.com/sownthary.sivananthan/videos/2133299903912370


     அம்மா!.... ( சௌந்தரி ATBC radio)

00
உன் முகம் பார்த்தேன் முதலில்
மென் கன்னம் இணைந்தது உடனே
சின்னக் கரங்கள் தொட்டது மெதுவாய்
அன்பாய் அணைத்தாய் உன் மார்பிலே
00
அம்மாவின் வாசனை வசமாய் இழுத்தது
அகப்பட்டது அமுதமான தாய்பால்
ஆனந்தித்து அருந்திட அருகில் வந்தார்
ஆசை முத்தம் தந்தார் அப்பா
00
முதல் ஆசிரியை நீ உலகை
முழுதாய் அறிந்தேன் இருவரிடமும்
முதலிசை அம்மா உன் இதயத்துடிப்பு
முகம் காணாமலேயே என்னை நேசித்தாய்
00
குரல் குணம் அறியும் முன்பே
தொப்புள் கொடியால் உணவு ஊட்டினாய்
துன்பம் வலியிலென் முதல் சொல்
துள்ளி விழும் அம்மா அம்மாவென்று
00
என் வளர்ச்சியின் இரகசியம் அம்மா
என் முதல் கவிதையும் அம்மா
உலகிலே முதல் தெய்வம் அம்மா
அன்னையருக்கு இன்ப வாழ்த்துகள்
00
வேதா. இலங்காதிலகம் - தென்மார்க்.- 8-5-2026 - சௌந்தரி வாசித்தார்.


         

செவ்வாய், 5 மே, 2026

584 (1084) நட்புச் சிகரனே!


   



    நட்புச் சிகரனே!

00

நெஞ்சக் கலசத்தின் சுடரே!

நெஞ்சுரம் பெருக்கும் இளவரசனே!

நெடுங்கடலாய் இசை பெருக்குபவனே!

காதல் இராகமெனும் கானமிசைப்பவனே !

குளிர் தென்றலாய் இதமளிப்பவனே!

00

நாளும் பொழுதும் உள்வாங்கும்

ஆளும் உணர்வு அமுதமாக

மூளுதலாக என்னுள் ஓங்கும்

மேளதாளமாகுமோ காதலின்

உண்மை நினைவின் பரிசுத்தம்!

00

அன்புக் கடலின் நவரசநோக்கே!

இன்பமாய் வசீகரித்து ஆசையில்

சுண்டியிழுக்குமோ! இரவும்

பகலும் பிரவாகமாய் அமுதமாய்

இறங்கும் இன்பமே! பாசதீரனே!

00

காதல் கவிச்சுடர்-வேதா. இலங்காதிலகம்.தென்மார்க்-5-5-2026


       


 

திங்கள், 4 மே, 2026

583 (1083) udakam - நிழல். சௌந்தரி போஸ்ட்

 

    



  நிழல். சௌந்தரி போஸ்ட் - my poem coming second reading

00
கண் விலகாது நிழலைப் பார்க்கிறேன்
கை நீட்டலாம் கதை பேச இயலாது
கண்ணாடியிலும் நீரிலும் தெரியும் உரு
காலின் கீழ் தானே சாய்ந்திருக்கும்.
00
ஒளித் தடுப்பின் மறுபுற இருட்டு நிழல்
களி தரும் மரநிழல் கவலையும் போக்கும்.
கவலையின் நிழல் மனதை வாட்டும்
துளி மகிழ்வும் முகத்தில் நிழலாகும்.
00
சந்தேக நிழல் துல்லியமாகத் தெரியும்
சூரியன் தவிர யாரால் நிழலை அழிக்கமுடியும்!
நிழலின் அருமை களைப்பில் தெரியும்
தீமை செய்வோருக்கும் நன்மை தரும் நிழல்.
00
நிழல் விழாத கோவில் கோபுரங்கள் நிறைய உண்டு.
இராஐராஐனின் கோபுரமும் ஒன்று
நிழலும் பொய் எல்லாம் பொய்
வெயிலுக்கு மட்டும் நண்பன்.
00
வேதா. இலங்காதிலகம். தென்மார்க்- 30-4-2026

2-5-2026 vaasiththaar.....Nanry 


https://www.facebook.com/sownthary.sivananthan/videos/952199984094597



         


602 (1102) பெட்டகோ பட்டம்!

                நான் 1990 ல் இருந்து 1993 வரை படித்த செமினாறியக் கட்டிடம் இடித்து தொடர் மாடியாகக் கட்டி பலர் குடியிருக்கின்றனர். வாகனத்தில் ...