https://www.facebook.com/sownthary.sivananthan/videos/10159170328623984
திறந்த புத்தகம்.
சுயசரிதை திறந்த புத்தகம்.
பயமின்றியெழுதத் துணிபவர் சிலரே
சுயநாட்குறிப்பும் சில மனிதரின்
நயமுடை வரலாறு பதிக்கும்.
எல்லாவற்றையும் எல்லோரும் எழுதுவார்களா!
வெல்லமாய்க் கரைந்தினிக்கும் புத்தகமாய்
மெல்லக் கதை வெளியாகி
வென்றிடுமா வாழ்க்கை நூலகத்தில்.!
நவரசங்கள், பள்ளங்கள், சிகரங்கள்
தவமுடை வாழ்வில் இயற்கை
துவண்டிடாது தடை தாண்டினால்
உவப்புடை உயரம் எட்டலாம்.
குடும்பப் பெருமையை நற்
துடுப்பாக்கிப், பலமாகக் காத்திடல்
வடுவில்லாப் பக்கங்கள் பெருக்கும்.
சிடுசிடுப்பற்ற புன்னகை பலமாக்கும்.
அகண்ட சாதனையாகத் திறவுகோல்
மிக உண்மையான விருப்பமே!
அகம் காதலுடன் தூரிகையாகும்.
முகவுரை, அட்டை, முடிவுரை தானாக விரியும்.
கணவர், குழந்தைகள், பெற்றோர், பேரப்பிள்ளைகள்
உணர்வுடை பளபளக்கும் தங்கப் படங்கள்!
திணறடிக்கும் இறைப் பரிசுகள்.!
வணங்கிடும் சிறப்புடை ஆசீர்வாதங்கள்.!
மூச்சிரைக்கும் வாழ்வென்பது உண்மையே!
ஆச்சரியம், ஓட்டப் பந்தயமே!
நீச்சலடித்து நற்தருணத்தைப் பதிப்போம்.
முயற்சியுடன் நம்பிக்கைச் சுடரேற்றுங்கள்.!
9-10-2020