00 ( தண்ணிய – குளிர்மை. )
தொல்பழங்காலத்துக் கலைமரபு ஓவியம்.
தெளிக்கும் எண்ணங்கள் - மனக்கண்ணாடி.
திண்ணிய கற்பனைத்தேர் - கலையமுது
வண்ணக் கோட்டுக் கிறுக்கல்கள்
நுண்மை விரிப்புக் கற்பனை மழை
வண்ண வடிவக் கலையலங்காரம்.
தென்றல் வரவின் நறுமண முன்றல்
உன்னத கருத்தியல் வெளிப்பாடு.
இன்சுவர் - மர - மட்பாண்ட – ஓவியம்.
இறகாக விரல்களசைய தயக்கமில்லா
உறவின் நாடி நரம்புச் செயற்பாடு.
பொறுமை சந்தேகமற்ற மெதுவான
பெறுமதி முன்னேற்றம் உயர்வாகும்.
( வியனுலக – பரந்த உலகம். )
விசுவகர்மாவாம் சிற்பமரபினரது கலைத்தொழில்.
அருமை வடிகால்கள் கலைஞானம்.
அறுபத்துநான்கு மரபுடைய இந்துக்
கலைகளில் தலையாயது சிற்பக்கலை.
பிரதிமை – தெய்வம் - கற்பனை
இயற்கை உருவங்கள் - மெய்மறத்தல்
மரமோ கல்லென (திருமந்திர வரிகள் 2290)
;;'' மரத்தை மறைத்தது மாமதயானை
மரத்தில் மறைந்தது மாமதயானை ''
கலைநயத்துடன் கண்கவரும் பல்லவ
(உள்ளார்ந்த ஆற்றலாக வெளிப்படும் கலைகளில் நுண்கலைகளாவன – கட்டிடக்கலை – சிற்பம் - ஓவியம் - இசை – நடனம் - நாடகம்.) சிற்பம் விக்கிரகவியல் கலையின் தாயூற்று.
இந்துக்கலை மெஞ்ஞானம் மிளிர்கின்ற மெய் சுடராய் விஞ்ஞானமாகி வியக்கும் விந்தையைத் தன்னகத்தே கொண்டுள்ளது என்கின்றனர்.
கலைமடியில் கண்மூடாப் படைப்புகள் தருபவர்கள் விசுவகர்மா சிற்ப மரபினர். உருவில் ஒரு புறம் காட்டுவது புடைப்பு சிற்பம்.
இங்கு நாம் காண்பது. முன்புற பின்புற உருக்காட்டுவது முழுவடிவச் சிற்பம். சிற்பக்கலை ஓவியப்புகழ் சாதனையாளர் மைக்கலேஞ்சலோ.
கவிச்சுடர் - வேதா. இலங்காதிலகம் -டென்மார்க் - 12-3-2022