பகலில் ஒரு வெண்ணிலா
வெண்ணிலா வந்ததும் வெளிச்சம்
கண்ணிலே மாதிரியே உற்சாகம்
மண்ணில் அனைத்தும் பொன்னிறம்
விண்ணின் இரவுக் கவிதையது
வெண்ணிலா நீயெனக்கு பகலிலடி
சந்தனத் தென்றல் சாமரமே
வந்து சாயும் பார்வையுமே
எந்தனின் ஊக்க மாத்திரையே
விந்தையடி உன் நெருக்கம்
வித்தைகள் செய்யத் தூண்டுதடி
காதல் முகம் காணாவிடில்
கூதல் இருளோடு பிணையுதே
நாதம் உன்மொழி என்னிதய
தாகம் தீர்க்குதே நீயென்
பகலின் வெண்ணிலா தானடி;
சிற்பியமைக்காத செதுக்காத சிலையே
அற்புத ஒளி சிந்துகிறாய்
நற்தவம் நான் செய்தேன்
கொற்றவளேயென் வாழ்வின் திருவே
தற்புகழ்ச்சி இது இல்லை
பகலிலொரு வெண்ணிலா பகட்டானவள்
நகலில்லை நீயடி அசலென்னுயிரே
அகம் நிறைந்தொளி வீசும்
திகட்டாத தமிழ்ச் சுவையே
தகதகக்குமென் தங்கச் சிலையே
19-3-2016


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக