புதன், 29 அக்டோபர், 2025

532 (1083) அறிவாளர் பலர் உலகில்!

 

           



                


அறிவாளர் பலர் உலகில்!

00

ஒருவரை யொருவர் மதித்து

பெருவிருப்போடு  மரியாதை செய்தல்

அருமைப் பண்பாகும் அத்துடன்

திருவுடை முதியோரை மதித்தல்

புருவமுயர்த்தும் இனிய பண்பு!

ஒருமுறை நீயும் முதிர்வாய்!

00

விருப்புடன் கேள்விக்குப் பதிலிடு

பெரும் அலட்சியம் அகந்தையாகும்

புகழும் சபையின் மதிப்பு

பண்பை அகத்தில் நிறைக்கட்டும்!

பெருமையில் தலைப்பாரம் கேடாகும்

கருமையாகும் தலை கவிழ்தல்

00

அறிவுரைகள் ஆதாயம் நிறைந்தது.

சிறிதாவது மதித்து நடந்திடு!

செறிந்த உலகில் நீமட்டுமல்ல

அறிவாளர் பலர் உளர்

அறிவுறுத்து மனதுக்கு சமநிலை!

உயர்நிலை! மானுடநீதியின் உயிரிழை!

00

கவித்தாமரை –வேதா. இலங்காதிலகம்-தென்மார்க்-29-10-2025



            



வெள்ளி, 24 அக்டோபர், 2025

530 (1081) நீள்தவ மனம்

 

           


          


    நீள்தவ  மனம்


இன்ப மேகங்கள் சுகமான சுமையாய்

அன்பி னிராகமாய் அனுராக கீதமாய்

இன்னிதழ்களின் எழில் மிகு நடனத்தில்

மென்னகை புரிவது கண்களில் நிதர்சனம்.

00

வினை மனப் போரின் வில்லங்கப்

பினைதலில் கொடும் விதியெனச் சொல்லும்

புனைவில் மனம் இறுகாத இளகிய

நினைவே இன்பம் சேர்ப்ப தியல்பு.

00

பயமடையாத தன்னம்பிக்கைத் தூணாம் மனம்

சுயம் அழியாது காக்கும் தனம்.

யெயம் காணத் துடிக்கும் தினம்

நயம் ஒன்றே விரும்பும் மனம்

00

முழுமதி – வேதா. இலங்காதிலகம் - தென்மார்க் - 24-10-2025


               



ஞாயிறு, 12 அக்டோபர், 2025

529 (1080) 6. நாலடியார்

 

       மூன்றாவது இன்பவியல்.


மனதிலே மகிழ்ச்சியை அடைதல் 

அம் மகிழ்ச்சி  பொருளாலும் உறவினர்

நண்பினராலும் பெறப்படுவதால் இது பொருட்பாலில்

நட்பியலுக்குப் பின் வைக்கப் பட்டது.


       




6. நாலடியார்    25ம் அதிகாரம்     அறிவுடைமை.


பராஅரைப் புன்னை படுகடற்றண் சேர்ப்ப

ஒராஅலு மொட்டலுஞ் செய்பவோ நல்ல

மரூஉச்செய்தி யார்மட்டுந் தங்கு மனத்தார்

விராஅஅய்ச் செய்யாமை நன்று.


பருஅரை – பருத்த அரையுடைய புன்னை – புன்னை மரங்கள்

படு – பொருந்தின  யார் மாட்டும்-எத்தகையாரிடத்தும். நல்ல மரூஉசெய்து-மிகுந்த நட்பினைப் பாராட்டி. ஒராஅலும்- பின்னர் மனம் வேறுபட்டுப் பிரிதலும். செய்பவோ- செய்வார்களோ. விராஅஅய் செய்யாமை-ஆராயாது கலந்து நட்புக் கொள்ளாதிருத்தலே.


         



எனது வரிகள்:-


பரந்த அரைகொண்டு அணைந்த

புன்னை மரங்களின் கடற் துறையாளனே!

நல்ல குணம் கொண்ட மனதாளர்

எவரிடத்தும் நல்ல நட்பு பாராட்டி

பின் மனம் மாறிப் பிரிதலும்

மறுபடி சேர்தலுமாக நடப்பார்களோ! ஆராயாது

கலந்து நட்புக் கொள்ளாதிருத்தலே நன்மையானது.



வேதா. இலங்காதிலகம்.தென்மார்க் 12-10-2025

-----------------------------      



          



செவ்வாய், 7 அக்டோபர், 2025

528 (1079) இரக்கமில்லா மனிதர்கள்

 

          முத்தமிழ்சாரல் (கவிதைகளின் கருவூலம்) 12-7-25


.(பரக்குதல் - அலைந்து திரிதல்

பிரக்கினை – உணர் வு.   அறிவு.

பாவகன் - தூய்மையானவன்.

பாலனன் - காப்போன்.)


தலைப்பு----

     


இரக்கமில்லா மனிதர்கள்

00

இரக்கமில்லா மனிதர்கள் அரக்கர் அருவருப்பாளர்

சுரக்காத மனிதநேயம் தரக்குறைவான பிறப்;பாகும்.

விரக்தியில் பெண்ணைப் பாலகரைப் பேணாது

விரோதித்தால் வாழ்வு சுடுகாடாகும் உண்மை

00

பரக்குதல் இன்றி பிரக்கினையோடு அரவணைத்தால்

பார் போற்றும் இரக்கமுள்ள இறையாவான்.

பாதிப்பின்றிப் பாலனனாய்  உலகை மலடாக்காமல்

புவியைப் பாவகனாய் நந்தவனமாய்  மாற்றுவான்

00

வேதா. இலங்காதிலகம். தென்மார்க். 8-7-2025


            


    


        






திங்கள், 6 அக்டோபர், 2025

வியாழன், 2 அக்டோபர், 2025

525 (1068) uudakam - இழப்பு இரசனையற்றது. - மதிமலர்

                      இழப்பு இரசனையற்றது. - மதிமலர் இதழுக்கு17-9-2025

     


                                    


இழப்பு இழப்புத் தான்!

குழப்பி மனிதனைக் கலக்கும்.

உழப்புக் (வருத்தம்) குறைய, மனோதிடம்

இழக்காது உழத்தல் (வெல்லுதல்)அமலம் (மாசற்றது).


இழப்பு பொருளானால் ஈட்டலாம்.

இழப்பு உயிரானால் வழியேது!

இழப்பாளியின் பலவீனம் தோல்வி.

எழல் எழிலான புரவி.

   

சிலரது பகிரங்கப் புலம்பல்

சிலரது ஊமைப் பல்லவி.

தோகை விரிக்கும் மனோதிடம்

வாகை மலராடை போர்த்தும்.


பரிவுச் சிறகணைப்பு இதமது

விரிக்கும் நம்பிக்கை மழை.

தரிக்கும் சிந்தனைச் சறுக்கல்

சிரிப்பை அற்ற (வற்றிய) குளமாக்கும்.


பா வானதி வேதா. இலங்காதிலகம்.  டென்மார்க்  25-2-2015



    



568 (1068) sanrithal - (பெண்மை) யாதுமாகி நின்றவள் பெண்ணே!

                 (பெண்மை)    யாதுமாகி நின்றவள் பெண்ணே!   - ( தேன்தமிழ்க் கவிவனம். சர்வதேச மகளிர்தினச் சிறப்புப் பேட்டி.) 00 (குமைதலின்றி – ...