வியாழன், 26 மார்ச், 2026

568 (1068) sanrithal - (பெண்மை) யாதுமாகி நின்றவள் பெண்ணே!

 

    


        




 (பெண்மை)    யாதுமாகி நின்றவள் பெண்ணே!  


- ( தேன்தமிழ்க் கவிவனம்.

சர்வதேச மகளிர்தினச் சிறப்புப் பேட்டி.)

00

(குமைதலின்றி – குமைந்திடாது)


அமைந்த வாழ்வை அற்புதமாக்கும் வித்தைக்காரி!

குமைந்திடாத ஞானத்தால் அத்தர் வாசனையாகிறாள்

சமையல் மட்டுமல்ல சம்மேளனத்திலும் நட்சத்திரமாகிறாள்

சுமைதாங்கியாக யாதுமாகி நின்றவள் பெண்ணே!

00

பிறந்தகத்து முத்து மனைவியாகி அம்மாவாகிறாள்!

சிறந்த பிள்ளையைத் தானம் செய்கிறாள்

புறக்கணிக்க முடியாத உறவாய்ப் பேரர்கள்

பாட்டியாகப் பாசத்தில் பரிணமித்துப் பூரிக்கிறாள்!

00

ஒருத்திக்கு ஒருவன் என வாழ்பவள்

கரும்பு மனதால் மன்னிக்கும் தென்றலாகி

கருணைச் சாரலாகி இரும்பு மனதை

உருகச் செய்து திருக்குறளாய் வாழ்கிறாள்

00

வேதா. இலங்காதிலகம் - தென்மார்க் - 5-3-2026



            



      


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

568 (1068) sanrithal - (பெண்மை) யாதுமாகி நின்றவள் பெண்ணே!

                 (பெண்மை)    யாதுமாகி நின்றவள் பெண்ணே!   - ( தேன்தமிழ்க் கவிவனம். சர்வதேச மகளிர்தினச் சிறப்புப் பேட்டி.) 00 (குமைதலின்றி – ...