இலங்கை மாத சஞ்சிகை ஞானம்
இதழில் எனது கவிதை 4-3-2026
00
அற்புத அகத்திய தாகம்.
00
விழியில் விழும் விம்பங்களை
வரைந்து காட்டும் சாதனமாக
வண்ணமான எண்ண எழச்சியை
வரிசையாகப் பரப்பும் ஆயுதமாக
வானவில்லாகச் சேர்த்து உலகை
வனப்பாக மாற்றும் ஓவியமாக
வையகத்தில் விளைந்தவற்றை வரைபடமாக
விளக்கும் வெள்ளித் திரை கவிதையே!
00
வார்த்தைகளில் அடங்காத கனகதும்பி
வாக்கியமான எழுத்தெனும் பூக்காட்டு
வாசாலகமான(சொல்வன்மை)கவிதையில் நனைந்து
விளாவினால் கவிதையொரு போதையே
நீ தொலையாதிருக்க நாட்டு
நினைவு ஓவியங்ளை அழகாக!
அறிவு நதியில் அழியாதது
அற்புத அகத்திய தாகம்.
00
புதுமைக்கவி வேதா. இலங்காதிலகம் - தென்மார்க் 14-1-2026



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக