பெண்ணெனும் பேராற்றல் தேன் தமிழ்க் கவி வனம்.
00
பெண்ணெனும் பேராற்றல் உன்னத மாதவம்!
பெண் விடுதலையால் மண் விடுதலையாகும்
மண்ணில் மார்தட்டிய வேலுநாச்சியார் குயிலி
விண்ணேறிய கல்பனா எண்ணற்ற சுடரிகள்!
00
கொண்டாடி மகிழ சந்ததி உருவாக்குவாள்
கண்ணெனப் பேணுவோர் மாநிலத்தில் குறைவே!
கண்ணாடி மனதாள் ஆராட்டிக் காத்திடுங்கள்!
உண்மையில் அழகியின் அதிகாரம் பெருமிதம்!
00
தண்மைப் பிறவியைப் பாலியலால் பழிவாங்கல்
கண்ணாகப் போற்றாது சிறுமியை வன்புணர்தல்
திண்மையான ஆண்மைக்கு மகா களங்கமே!
வண்ணமான சிறப்பைப் பண்பாகப் பேணுங்கள்
00
வேதா. இலங்காதிலகம். தென்மார்க்- 2-3-2026



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக