சனி, 22 டிசம்பர், 2018

5 (594) புரியாத புதிர்





புரியாத புதிர்


பல விடயங்கள் புரியாத புதிராகும்
பொல பொல கண்ணீர், பணம்
பலமான நல்ல நோட்டா கள்ளமா
நிலை புரியவில்லை யாவும் புதிர்!

தொலை பேசி இல்லாத காலத்திலும்
நிலையாக மனிதன் வாழ்ந்தான் அன்று.
தொலை பேசியின்றி மனிதன் இன்று
மூச்சுவிட மறப்பது புரியாத புதிர்!

அன்பாகப் பேசினும் அருகு வரார்
அகம் திறக்காது எத்தனை மனிதர்!
அவர் எதனை நம்மிடம் எதிர்பார்க்கிறார்
அனைத்தும் எனக்குப் புரியாத புதிர்!

அதிர வைக்கும் படம், காமம்
கொப்பளிக்கும் படமும் வரிகளும்,
தன் முகத்தை பெயரை மறைப்பதும்
மனநோயா என்பது புரியாத புதிர்!


வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 13-6-2016

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

568 (1068) sanrithal - (பெண்மை) யாதுமாகி நின்றவள் பெண்ணே!

                 (பெண்மை)    யாதுமாகி நின்றவள் பெண்ணே!   - ( தேன்தமிழ்க் கவிவனம். சர்வதேச மகளிர்தினச் சிறப்புப் பேட்டி.) 00 (குமைதலின்றி – ...