வெள்ளி, 8 மார்ச், 2019

44 மாதுரியப் பெண்ணே.. (பாமாலிகை பெண்மை 27)









மாதுரியப் பெண்ணே....

பெண் குழந்தை பிறந்தால் அடுப்பில் தட்டுவார்
ஆண் கழந்தை பிறந்தால் கூரையில் தட்டுவார்.
சமையலறையில் உணவை விதவிதமாக
சமைத்திடுவாய் பெண்ணேயென அருமையாக
சமைத்து வைத்தனரொரு வட்டச்சிறை
சகித்துக் கொண்டவளுக்கு ஆதிக்கச்சிறை
முன்னாள் வரைகோடுகள் பெண்ணுக்காயிவை
இன்னாளில் நரை கண்டுள்ளவை.

கடலில் வீழ்ந்த மழைத்துளியல்ல
காணாமற் போகும் பெண்ணல்லவள்
பென்னம்பெரு விருட்சம் ஒவ்வொரு
சின்னஞ்சிறு வனிதப் பெண்மனமும்
ஊற்றும் மதுச்சாறவன் நாடியிலுள்ளாகி
தோற்றும் சாத்தான் வாழ்வைப்பிளக்க
நேற்றில்லாத மாற்றம் நுண்ணொளிக்
கீற்றாக ஆணுள்ளத்தில் நழையட்டும்.

மாற்றம் காலம் கொண்டிட
ஏற்றம் ஒளி விரிக்க
வெற்றியடையும் ஆணின் பின்புறம்
தொற்றும் வீரியப் பெண்ணே
சுற்றி நீயாய் முன்னாயெழு
வெற்றியுன் தேசியக் கொடியாகட்டும்
தீட்டும் வாழவினோவியப் பிழைகள்
தீயாகட்டும்! வாழ்வு காவியமாகட்டும்!

ஆளும் பெண்மையன்றுமிருந்தாள் நிலவுக்கு
நீளும் பெண்மையின்றும் இருக்கிறாள்.
தோள் கொடுக்குமேற்றம் அன்றில்லாததல்ல!
வாளும் எடுத்தாளே ஜான்சிராணி!
தாளின் அறிவு கேளவியறிவால்
மாளா ஞானம் வளர்ந்தவரைக்கும்
மாநில வாழ்வு சிறக்கும் பெண்ணே!
மாதுரியப் பெண்ணினாற்றல் மதிக்கப்படட்டும்!

2004.







Vetha-  Denmark










மிக்க மிக்க நன்றி வளரி இதழ்






4 கருத்துகள்:

  1. Maniyin Paakkal :- சிறந்த ஆக்கம்
    16-11-2018

    Vetha Langathilakam :- அன்புடன் மகிழ்வு மணி

    பதிலளிநீக்கு
  2. Vetha Langathilakam
    நீண்ட காலத்தின் பின் தங்கள் கருத்து..
    அன்பு மகிழ்வு
    Vetha Langathilakam
    Sj Siva:- அருமை அக்கா
    17-11-2018

    பதிலளிநீக்கு

568 (1068) sanrithal - (பெண்மை) யாதுமாகி நின்றவள் பெண்ணே!

                 (பெண்மை)    யாதுமாகி நின்றவள் பெண்ணே!   - ( தேன்தமிழ்க் கவிவனம். சர்வதேச மகளிர்தினச் சிறப்புப் பேட்டி.) 00 (குமைதலின்றி – ...