செவ்வாய், 19 மார்ச், 2019

52. (635) புத்தொளிர்வாயா புத்தாண்டே!







புத்தொளிர்வாயா புத்தாண்டே!


காலம் போரில் அழிந்துவிட்டது
ஞாலம் முழுதும் அறிந்துவிட்டது.
கோலம் திருத்த முனைந்துவிட்டது.
பாலம் அமைக்கத் தொடங்கிவிட்டது.

எத்திசையும் புகழ் ஓங்க
தித்திக்கும் நம்நாடு ஆங்கே
சொத்தாக எமக்காகிட  பாங்காய்
புத்தொளிர்வாயா புத்தாண்டே

புலம் பெயர்ந்தோர் துன்பங்கள்
தலம் பெயரட்டும். இன்பங்கள்
களம்  நிலைக்கட்டும். சொந்தங்கள்
உளம் மகிழ   பொங்கட்டும் மங்களம்.

செத்தொழிந்த உயிர்கள் போதும்
மத்தாகிய தமிழர் நிலையும் போதும்
எத்திசையும் பட்டொளிர்வாயா புத்தாண்டே
புத்தொளிர்வாயா புத்தாண்டே!


20.12.2002





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

569 (1069) udakam - நந்தவனம் ஏப்ரல் 2026

          நந்தவனம் ஏப்ரல் 2026   இதழ் சுவிட்சலாந்து  இதழாக  மலர்ந்தது.  சுவிஸ் பற்றி கொஞ்சம் எழுதியுள்ளேன். நந்தவனத்திற்கு நன்றி           ...