செவ்வாய், 5 மார்ச், 2019

42. (628) தாயே (எதுகை - யே) -







தாயே  (எதுகை - யே)

இயேசுவே நீயுமென் 
தாயே அன்பை 
ஈயேனென்று சொல்லாதவர்-
ஏயே! (இகழ்ச்சிக் குறிப்பு) பேயல்லவே!
¤
ஐயே! அம்மாவே!
ஓயேன் எழுதுவேனுன்னைக்
காயேன் சிரியம்மா!
கையேற்பேன் பரிசினை.
¤
கையேந்தி வாழாதேயென
கையேட்டில் எழுதினாளம்மா.
சாயேனம்மா. கேட்டொழுகுவேன்.
சுயேச்சையாய் உயர்வேன்.
¤
தீயே என்றாலும் 
நாயே என்றாலும்
தாயேயுனை வெறுக்கேன்.
நீயே தெய்வம்.
¤
நோயே வந்தாலும் 
பாயே வேண்டேன்.
பேயே போன்று 
போயே விடுவேன்.
¤
சேயே கூறுகிறேன்
மையே பூசினும்
தாயேயுன் கண்ணழகு.
வாயேன் கிட்ட.
¤
 13-8-16



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

602 (1102) பெட்டகோ பட்டம்!

                நான் 1990 ல் இருந்து 1993 வரை படித்த செமினாறியக் கட்டிடம் இடித்து தொடர் மாடியாகக் கட்டி பலர் குடியிருக்கின்றனர். வாகனத்தில் ...