செவ்வாய், 8 ஜூன், 2021

350. (913) சூழ்வினையாய் வந்த சூர்ப்பனகை.

 




சூழ்வினையாய் வந்த சூர்ப்பனகை.     

00

இரத்தம் குடிப்பவளாகவும், பாம்பை வளையலாகவும்,

இரத்தப் பலி கொள்கவளுமான அரக்கர் குல

இரத்தவெறி அரசி தாடகையின் கொடுமை

இரக்கமற்று அதிகரித்ததால் இராமன் அழைக்கப் பட்டார்.

00

பெண் கொலையாவென்று இராமர் தயங்கினாலும்

எண்ணியபடி தாடகை வதம் நடந்தது

கண்ணியமாய் ஈமக்கிரியைகள் தாய்க்குச் செய்ய

கண்ணான புதல்வரை இழைத்தார் இராமர்.

00

இங்கு இராமரின் ஈகைக் குணம்

இனிதாய்  வெளியானது கொன்றது ராமராயினும்

இறுதிச் சடங்கை நிறைவேற்றப் கதல்வரை அழைத்தார்

இசைந்து மாரீசன் சடங்கை நிறைவேற்றினான்.

00

விடை பெற்ற மாரீசன் தம்பி

வினையானவன் சுபாகு கெடு செய்வான்

விவரமாக இருங்கள் என்று விலகினான்.

விக்கினமுடைய சுபாகு மாரீசனைக் கொன்றான்.

00

13-9-2017







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

602 (1102) பெட்டகோ பட்டம்!

                நான் 1990 ல் இருந்து 1993 வரை படித்த செமினாறியக் கட்டிடம் இடித்து தொடர் மாடியாகக் கட்டி பலர் குடியிருக்கின்றனர். வாகனத்தில் ...