வியாழன், 29 ஜனவரி, 2026

553 (1053) இயற்கை -2 மழை....

 

      இயற்கை  தலைப்பில் - வேதாவின் வலை 1  ல் 78 கவிதைகளும் 

வேதாவின் வலை 2 ல்  95 -கவிதைகளும்

பதிந்துள்ளேன். இனி ஒன்றிலிருந்து ஆரம்பம் இந்த வலையில்

இந்த இணையத்தில்.    2

    






       



                 மழை....

00

படபட சடசடவென

பெட்டியில் விழுவது போல்

தகரத்தில் விழுவது போல்

குட்டிக் கற்கள் எறிவது போல்

00

அதிகாலை ஆறமணிக்கு

மழைத்தூற்றல் வலுத்தது.

என்தூக்கத்திலும் கல்லெறிதல்

சத்தத்தை ரசித்தபடி போர்வைக்குள்

00

டொக் டொக் என்று மழை

பெருமித வரங்கள் இவை

கவிதை நர்த்தனம் தானே!

காற்றின் மீதொரு நடனம் தானே!

00

இலைக்காடும் நீர்க்காடுமான

மழையின் கதையை ரசிக்க

யார் கூறுவார்! ஆதிமாந்தனும்

தோணி ஓட்டியகதையை...

00

கோவை பாரதி-  வேதா. இலங்காதிலகம். தென்மார்க்  29-1-2026



     





வியாழன், 22 ஜனவரி, 2026

552 (1052) விற்பன்னர்கள் பலர்!!!!!!

 


 


         


 

 விற்பன்னர்கள் பலர்!!!!!!

00

ஏராளமாக திறமைசாலிகள் உலகில்

தாராளமாக விற்பன்னராக உலவுகிறார்!

பேராளும் விருதை சிபாரிசில்

தொடராகப் பெறுவார்  ஒருவரோ!!!

00

ஆராவமுதமான விருதைப் பிறருக்காக

ஊராண்மை மனம் விடாதோ!

சாராம்சமான சிறப்பு விருதுகள்

சீராளனுக்கா சிபாரிசுக்கா  கேள்வியே!

00

அறம் பிறளும் நிலையின்றித்

திறமை மதிக்கப் படுகிறதா!

நறவுடை பட்டப் பகிர்வு

நியாயமாக நிறைவேறுகிறதா!!!

00

தமிழன்னை-வேதா.இலங்காதிலகம் - தென்மார்க்.-22-1-2026


      



ஞாயிறு, 18 ஜனவரி, 2026

551 (1071) நிவேதனம் என்பது அன்பு

 

    

        



        



     நிவேதனம் என்பது அன்பு

00

எங்கள் ஊருக்கு வந்தும்

என்னோடு ஒரு சொல்

எங்ஙனம் பேசாமல் இருந்தாய்!

எடுத்தெறிதலாக எனக்கு இருந்தது.

00 

என்று வருவாய் நீ

எங்கு தங்குவாய் என்பதும்

எனக்குத் தெரியாதே! மௌன 

நாடகமாகத் தான் இருந்தது.

00

முந்தி வந்த செவியை

பிந்தி வந்த கொம்பு

மறைப்பது உண்மை போல

கறை படர்ந்த நடவடிக்கை

00

நேச நெய்யை மறைத்தது

நியாயப் படுத்தாத துரோகம்

அன்பை உதறிய காரணம்

தன்னிலை விளக்கமுண்டோ!

00

நிலைகுலைய வைக்கும் நிராகரிப்பு

நிறைய வைக்காது அன்பை

நின்மல அன்பை எதிர்பார்த்தேன்!

நினைப்பு நொருங்கியது துன்பம்

00

நிறையழிதல் நேசப் பிரிவு

நிறைகுடமென நினைப்பது பொய்யோ!

நிவேதனம் என்பது அன்பு

நிலையாமையின்றி அள்ளிக் கொடு!

00

கவிமணி – வேதா. இலங்காதிலகம் -தென்மார்க் -18-1-2026



          



வியாழன், 15 ஜனவரி, 2026

550 (1070) uudakam - in iniya nandavanam 2026 pongal

 

           in iniya nandavanam  2026  pongal - eniya nanry Chandra!


  பொங்கல் சிறப்புமலர்க் கவிதை

00

2026 பரபாவ வருடம் தைப்பொங்கல்.

00

பரபாவ வருடப் புதிய பொங்கல்

பரபாகம் - நற்பேறு – மிதமாகத் தருக!

பரபோகம் - பரமானந்தம் - தொடர்ந்து பெருகுக!

பழையன கழிந்து புதியன பொங்குக!

00

வருக தைமகளே வழியெல்லாம் பூப்பூக்க

உருகிய தமிழினிமையில் சாரல் சொரிக!

கருக கொடுமைகள் பொய்கள் ஒழிக!

தருக நற்பலன்கள் மானுட வாழ்வோங்க!

00

பரிதிக்கு காளைகளுக்கு நன்றியை சேர்ப்போம்

புதிய தையில் பொங்கட்டும் புத்துணர்வு

பயறு பச்சரிசி சர்க்கரை பாலோடு

நெய்யும் ஏலரிசி கராம்பும் மணக்கட்டும்!

00

இணர்தல் (விரிதல்)உழவரின் வாழ்வாய் ஆகட்டும்!

உணர்வோடு தமிழும் உண்மையும் வளரட்டும்!

அணர்தல் (மேல்நோக்கியெழுதல்) மட்டுமே உலகை அழகாக்கும்

உணர்தல் பகுத்தறிவாய்ப் பவித்திரம் ஆகட்டும்!

00

கவிச்சிகரம் வேதா. இலங்காதிலகம் - தென்மார்க் -18-11-2025


------------------------------      


     



              


                



         


திங்கள், 12 ஜனவரி, 2026

549 (1069) அறிவு மட்டும் போதாது!.....

 


      


         அறிவு மட்டும் போதாது!.....

00

ஒரு வார்த்தை பேசினால்

அருமை குறையாது  பெருகுவது

அன்பு தான். திமிரும்

ஆணவமும் பசையாக ஒட்ட

அனூதிக்குமா நுதலோடை அலை!

அதிசயமல்ல மனிதர் மாறுவது

00

அன்போடு சுகமா என்பது

அளப்பரும் வாஞ்சை தருவது

அதைத் தருவதற்கும்  முருகா!

அத்தனை கஞ்சத்தனம் ஏன்!

இரும்பு மனதை இளக்கு!

அறிவு மட்டும் போதாது!

00

கவிஅரசி -வேதா. இலங்காதிலகம் -தென்மார்க் -12-1-2026





    




ஞாயிறு, 11 ஜனவரி, 2026

548 (1068) Hospital -2

 

      

       Vetha Langathilakam

January 9 at 8:25PM 
Shared with Public
சிறுகுடலிற்கும் கணையத்திற்கும் இடையான நீல பாதையில்
தெரியும் வட்ட நீல அடையாளம் எனது பிரச்சனை.
பாதையை அகட்டி சிறுகுடலால் அது வெளியேறும் எனக் காத்திருப்பு.
3 மாதத்தால் அழைப்பு வரும்.
9-1-2026



          





      


  

547 (1067) Hospital.... 8-1-2026

 

             


      



         





     


568 (1068) sanrithal - (பெண்மை) யாதுமாகி நின்றவள் பெண்ணே!

                 (பெண்மை)    யாதுமாகி நின்றவள் பெண்ணே!   - ( தேன்தமிழ்க் கவிவனம். சர்வதேச மகளிர்தினச் சிறப்புப் பேட்டி.) 00 (குமைதலின்றி – ...