புதன், 4 ஜூன், 2025

481 (1023) கவிதைப் பள்ளு – 3

 

        


      


              கவிதைப் பள்ளு – 3


என் கவிதையை ஒருநாளேனும்

ஏன் ஆராயவில்லை நீ!

நாலு  வரி எழுதினாலும் 

மேலும் ஒரு விருது!!

00

மொழியெனும் வாகனத்தில் நிதம்

கழிபடர் (மிகுந்த துயர்) இன்றி உயிர்

செழிப்புடன் செல்லும் பயணமிது.

பழிப்பற்ற பவித்திரப் பாதையிது.

00

இயல்பான  இலக்கியமான வாழ்வை

அயர்ச்சி அலுப்பின்றி அலசலாம்

சுயநலமின்றிப் பொதுநல வழியில்

தயக்கமின்றி இன்னலற்று வாழலாம்.

00

அழிவில்லாக் கவிதைப் பள்ளு

அழிமதி (கெடுமதி) இன்றி உலகிற்கு

எழிலாகப்  பக்குவமாய் பாழானவை

ஒழிய வரிகள் செதுக்கலாம்

00

ஆராய்ந்து ஆராதனம் (சிந்தித்து) செய்து

ஏராளம் சொற்கள் தேடி

ஓராங்கு( ஒருசேர)பொருந்த இணைத்து

சாராம்சமாகத் தருவதே பனுவல்

00

கவிஞர் திலகம்  வேதா. இலங்காதிலகம்  தென்மார்க். 4-6-2025


                     




                               

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

568 (1068) sanrithal - (பெண்மை) யாதுமாகி நின்றவள் பெண்ணே!

                 (பெண்மை)    யாதுமாகி நின்றவள் பெண்ணே!   - ( தேன்தமிழ்க் கவிவனம். சர்வதேச மகளிர்தினச் சிறப்புப் பேட்டி.) 00 (குமைதலின்றி – ...