செவ்வாய், 2 டிசம்பர், 2025

543 (1063 சொல் செயல் வீரனாகு!

 




      


 சொல் செயல் வீரனாகு!

00

சொன்ன சொல்லைக் காப்பாற்றுதல்

அன்னை சொன்ன நீதிமொழியோ!

தன்னுள் தளிர்க்கும் நேர்மையோ!

பின்னிடும் அன்பின் துளிர்ப்போ!

00

நேர்மையாய் வாழ முயன்றால்

நேர்;த்தியான வாழ்வைப் பெறுவீர்கள்!

நேர்வழி என்றும் நிம்மதியே!

நேசமும் பெருகும் நீதியாக..

00

நதி சொல்விக் கொண்டு

பதிப்பதில்லை தன் பாதையை

நமக்கான பாதை நம்பிக்கையில்

நிலைத்து வேர் ஊன்றுவது...

00

பிறரை ஏமாற்றி வாழ்தல்

பிடிப்பு அற்ற வாழ்வு

பயமும் பதற்றமும் தரும்

பண்பாக வாழ்தலே நிம்மதி!

00

செந்தணல் கவி –வேதா. இலங்காதிலகம் தென்மார்க் 2-12-2025



        



1 கருத்து:

568 (1068) sanrithal - (பெண்மை) யாதுமாகி நின்றவள் பெண்ணே!

                 (பெண்மை)    யாதுமாகி நின்றவள் பெண்ணே!   - ( தேன்தமிழ்க் கவிவனம். சர்வதேச மகளிர்தினச் சிறப்புப் பேட்டி.) 00 (குமைதலின்றி – ...