செவ்வாய், 24 பிப்ரவரி, 2026

557 (1057) சொற் கொல்லர்!

 

      



         


சொற் கொல்லர்!


சொற் சிற்பம் வடித்தலென்பது

நற்  கவிதை புனைதல்

சொற் கொல்லர் எனவாகலாம்!

அற்பமல்ல அற்புதம்! அற்புதம்! 


தைரியமான தொல்காப்பியச் சாலை 

தூரிகையில் ஞானத் தொழற்சாலை

தத்துவமான அறிவு உழவில் - வாக்கு

நேர்த்தியாய்க் கொட்டட்டும் தமிழ் வயலில்.


வேதா பாரதி – தென்மார்க் -24-2-2026


          






சனி, 21 பிப்ரவரி, 2026

556 (1056) அலட்சியம் பண்ணுவோருக்கு ஆதரவும் தேவையே!!!!

 

      



      



 அலட்சியம் பண்ணுவோருக்கு ஆதரவும் தேவையே!!!!

00

நடிப்பான உலகம் நயமான வேடம்

துடிப்பாகத் தெரியும் விழித்திரை நாடகங்கள்

அடிவான ஒளியல்ல  மனதிலும் ஈரமல்ல

ஆச்சரிய எடுப்பு  மிளகுக் கனவு

00

விண்ணப்பம் செய்யாத வேண்டாத மழை

கண்ணில் புழுதி கிளப்பும் மணல் மேடு

அண்மிக்கும் நிலை ஒரு சுயநலமோ!

உண்டியலாம் மனதில் நட்பு சேமிப்பில்லை

00

நட்பை மனஉண்டியலில் இடுவதற்கு

நட்சத்திரக் குழுவில் கொஞ்சம் ஒளி

கேட்டு கடிகாரம் கவனமாக முத்தமிடும்

முட்களாக மாறலாமோ அன்பு செய்ய!

00

சுயநல உலகம் தான் பொய்யல்ல

இயங்கும் கபட நாடகம் கவனம்!

தயங்காது துணிந்து முன்னேறு! முன்னேறு!

மயங்காதே பாக்கியமும் நன்மையும் நெருங்கும்!

00

புதுமைக் கவி – வேதா. இலங்காதிலகம் - தென்மார்க் -22-2-2026



        



செவ்வாய், 10 பிப்ரவரி, 2026

555 (1055) எப்ஸ்ரின் கோப்புகள்

 

       


                 


                இந்திரன் கெட்டதும் பெண்ணாலே

சந்திரன் கெட்டதும் பெண்ணாலே


00

எப்ஸ்ரின் கோப்புகள்

00


படித்தவர்கள் பணக்காரர்களைப் பார்க்கவே

பிடிக்கவில்லை...பயமாக உள்ளது.

பின்னேகும் எண்ணங்கள் வக்கிரமாம்

பெண்ணோடு  சடுகுடு ஆட்டம்!

கண்ணான பாலகரோடு பாலியலாட்டம்

00

கொடூரமான ஆட்டம் மனதில்

கோலோச்சி  உலகையும்  திரட்டியது

கௌதமமுனிவராக இந்திரன் மாறினான்

அகலிகை சாபம் பெற்றாள்

இந்திரனும் கெட்டான் பெண்ணாலே

00

புராணங்களும் காமத்தை முதலாக்கியது

பெண்களைக் கருவியாக்கியது விநோதமல்ல!

எப்ஸ்ரின் கோப்புகளும் அழிந்துபோகும்

காமமும் தொடர்ந்து வாழும்!

கன்னியர் விதியும் இதுவுமாகும்!

00

பாரதி விருது -வேதா. இலங்காதிலகம் - தென்மார்க் - 10-2-2026






வியாழன், 5 பிப்ரவரி, 2026

554 (1054) 9.(249) நாலடியார் 25ம் அதிகாரம் அறிவுடைமை.

 

     



         




  9.(249)  நாலடியார் 25ம் அதிகாரம் அறிவுடைமை.


(மூன்றாவது இன்பவியல்.


00


மனதிலே மகிழ்ச்சியை அடைதல் 

மகிழ்ச்சி பொருளாலும் உறவினர்

நண்பினராலும் பெறப்படுவதால் இது பொருட்பாலில்  நட்பியலுக்குப் பின் வைக்கப் பட்டது.)




9.(249)  நாலடியார் 25ம் அதிகாரம் அறிவுடைமை.


கரும வரிசையாற்  கல்லாதார் பின்னும்

பெருமை  யுடையாருஞ் சேற - லருமரபி

னோத  மரமற்று  மொலிகடற் நண் சேர்ப்ப

பேதமை யன்ற  தறிவு.


எனது வரிகள் - 


ஒரே சீரான  அலைகள் ஆர்ப்பரிக்கும்

குளிர் கடற்துறையுடைய நாட்டிற்கு வேந்தனே! 

பலருக்குப்  பயன் தரும் நற்காரியம்

இனிதே நிறைவேற பெருமையுடையவர் 

அறிவிலார் பின் செல்வது  அறியாமையன்று

நற்காரியத்தின் பொருட்டு  கல்லாதாருடன்

கலந்து வாழ்தல் அறிவுடைமையாகும்

----------



        



568 (1068) sanrithal - (பெண்மை) யாதுமாகி நின்றவள் பெண்ணே!

                 (பெண்மை)    யாதுமாகி நின்றவள் பெண்ணே!   - ( தேன்தமிழ்க் கவிவனம். சர்வதேச மகளிர்தினச் சிறப்புப் பேட்டி.) 00 (குமைதலின்றி – ...