சனி, 20 ஏப்ரல், 2019

71. சிறுப்பிட்டி அம்மன். ( ஆன்மிகம் -28)







சிறுப்பிட்டி அம்மன்.

சிறப்புடை யாழ்ப்பாண நகரிலே
சிறுப்பிட்டி சிற்றூரில் சீரோடு
சிவனோடு இணைந்திட்ட அன்னையாம்
சிவகாமி அம்மாளே பணிகிறோம்.  (சிறப்புடை....)

பசுமை கொழிக்கும் வயல்கள்
பரந்த வாழை, புகையிலையாம்
பல்லினப் பழச்சோலை நிறைத்தெமைப்
பரிபாலிக்கும் மனோன்மணித் தாயே!   (சிறப்புடை....)


கருணாகடாட்சி அம்பிகையே! உன்
கருணையாட்சி தெய்வீகமே! தொல்லைகள்
துடைக்கும் கிரியப்பை அம்மனே
வல்லையப்புலத் தாயே அருள்வாய்.   (பசுமை கொழிக்கும்....)


ஆதியில் இராமபிரான் அம்பூன்றிய
ஆழமறியாவூற்று நிலாவரை யருகே
ஆன்மபலம் தருகிறாய் இராஜேஸ்வரியன்னையே
ஆராதிக்கிறோமுன் அருளொளி வீசுவாய்.  (சிறப்புடை....)


15.9.2014



1 கருத்து:

568 (1068) sanrithal - (பெண்மை) யாதுமாகி நின்றவள் பெண்ணே!

                 (பெண்மை)    யாதுமாகி நின்றவள் பெண்ணே!   - ( தேன்தமிழ்க் கவிவனம். சர்வதேச மகளிர்தினச் சிறப்புப் பேட்டி.) 00 (குமைதலின்றி – ...