சனி, 27 ஏப்ரல், 2019

75 . (656) காற்று நிரப்பிய கனவுகள்






(இறுதி வரி)  

காற்று நிரப்பிய கனவுகள்

வெற்றிடத்துக் காற்றைக் கருவியுள் புகுத்தலாய்
அற்புத எண்ணங்களை மூளையுள் ஏற்றுதலின்
சொற்பதம் கனவு!  எண்ணக் கனவு!

கனவுகளுக்கும் பலன் உண்டாம் என்று
இனம் இனமாய் எழுதுவார்கள், கூறுவார்கள்.
கனமென்று கருதாது நிதானமாய் மேலே யனுப்பலாம்.

காற்றடித்த  உறையால் வானம் புகலாம்.
ஆற்றலுடை எண்ணங்களால்   அணை தாண்டலாம்.
ஊற்றுத் தானே கனவுகள் இறுதிவரை

அப்துல்கலாமின் அருமை மொழி தானே
தப்பின்றி இளைஞருக்குமாக  ஓயாது உயர
' எப்போதும் கனவு காண்! ' என்பது.

கருவறையும் இன்றெமக்குக் கனவு தேசமே!
ஒருமுறையும்  திரும்பிச் செல்ல முடியாதது!
ஒரு கண்ணாடிப் பிரதி பிம்பமே கனவு!

பற்று நல்லவனாய் வாழும் கனவை!
முற்று முழுதான சுகவாச மாளிகை
காற்று நிரப்பிய கனவுகள்.

 7-12-2017




1 கருத்து:

569 (1069) udakam - நந்தவனம் ஏப்ரல் 2026

          நந்தவனம் ஏப்ரல் 2026   இதழ் சுவிட்சலாந்து  இதழாக  மலர்ந்தது.  சுவிஸ் பற்றி கொஞ்சம் எழுதியுள்ளேன். நந்தவனத்திற்கு நன்றி           ...