கனா கண்டேனடி
கனா கண்டேனடி கவிதையில் வென்றேனடி
வினா ஏதுக்கடியினி விசும்பாதேயென்னைப் பார்!
கனா காணடி! தாலி தயாரடி
பொன்னுருக்கி வார்த்த வானம் பார்!
கண்மணியே என்னை மணப்பாயா சொல்!
10-6-2017
கரையின்றி எழுதுவோம் பல கவிதைகள்
கங்கையாய் ஓடட்டும், இலக்கியத் தமிழ்க்
கடலில் சேரட்டும் கலைவாணி அருளுடன்.
திடலில் வானம் தொடும் தூரமாகும்
கடலைத் தாண்டுதல் கடும் பிரயத்தனமே.
கோட்டை கொத்தளம், குடிசையிலும் எம்
பாட்டைப் பலரும் பேச வேண்டும்.
ஊட்டமிகு கருத்துடனே இறப்பில்லா வரிகளாய்
கூட்டி எழுத வேண்டும் நாம்
கேட்டாயா கண்மணியே என் ஆசைகளை
5-11-2019



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக