செவ்வாய், 29 அக்டோபர், 2019

210. (779 ) தத்துவம்








தத்துவம்

அமைதிக் குளத்தின் ஆழ்ந்த தியானம்
சமைந்தது சளக் கென விழுந:த கல்லினால்
சுழன்று சுற்றியது சுழி அலைகள்
தொலைந்தது பளிங்கு நீரின் அழகு
கலைந்தது ஒப்பில்லா அமைதித் தவம்

மதிநுட்ப மனஅரங்க அமைதி
விதியெனக் கலைவதும் மனிதர்களால் தான்
கொதிக்கும் பல நினைவு அலைகள்
மிதிக்கும் மனஅமைதித் தவத்தை

எறும்புச் சுறுசுறுப்பு ஒழியாமல்
குறம்புச் சிறுகதை குறையாமல்
விரிந்த பூ  முகம் வாடாமல்
மலர்ந்த மலர்ச் சிரிப்பு மனக்கட்டும்.
(பந்தபாசம் படத்தின்- கவலைகள் கிடக்கட்டும்- பாடலுக்கு எழுதிய வரிகள்.)

2006




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

602 (1102) பெட்டகோ பட்டம்!

                நான் 1990 ல் இருந்து 1993 வரை படித்த செமினாறியக் கட்டிடம் இடித்து தொடர் மாடியாகக் கட்டி பலர் குடியிருக்கின்றனர். வாகனத்தில் ...