புதன், 30 அக்டோபர், 2019

211. (780 ) நன்மைகளால் மனிதம் வாழவேண்டும்.







நன்மைகளால் மனிதம்  வாழவேண்டும்.

பந்தங்களின்றிப்  பாசவலை அறுந்து
நொந்து இதயம் துகள் துகளாகுவோர்
வெந்து மனம் வேதனையில்  கரைவோர்
வெறுமைத் தனிமையில் விரக்தி கொள்வோர்
வறுமையில் சுயதகுதி இழப்போருடன்
வசநதத்  தென்றலாய் இதமாகப் பேசுதல்
நொந்த இதயத்திற்கு நெம்புகோலாகும்- இது
நொடியில் மனம் இயக்கும் மின்சாரமாகும்.

இந்த உலகு தனக்கு வேண்டாம் என்றவனுக்கு
உந்தும் வார்த்தை உயர்ச்சிப் படியாகும்.
கெந்தும் தடுமாற்றம் மனப்பாரம் விலக்கும்
சிந்துபாடி சுயநம்பிக்கை அரங்கேற்றும்.
வந்த தனிமைத் தடை நீங்கும்.
எந்தப் பணமூட்டை தரும் நன்மையிலும்
எளிமை மனஉதவி தரணியில் தளர்வோனுக்கு
குளிர்மைத் தபோவனமாகும், தலை உயர்த்தும்.


தொன்மை   மனிதரின் ஆதி வாழ்வின்
தன்மை தகுதி வேறு - இன்று
பன்மை  அறிவு பெற்ற மனிதர்
நன்மை   வழி நடக்காது மாறுவது
வன்மை வழியைச் சிலர் தேடுவது
உண்மை அறிவுடை மனித சுபாவமல்ல
வெண்மை உள்ளமாய் நன்மைசெய்தால்
அண்மையாய் இறைவன் அருகில் நெருங்கலாம்.

17-4-2007
(தமிழ் அலை வானொலியில் வாசிக்கப்பட்டது)









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

602 (1102) பெட்டகோ பட்டம்!

                நான் 1990 ல் இருந்து 1993 வரை படித்த செமினாறியக் கட்டிடம் இடித்து தொடர் மாடியாகக் கட்டி பலர் குடியிருக்கின்றனர். வாகனத்தில் ...