வெள்ளி, 28 பிப்ரவரி, 2020

255. (818 ) அவையளுக்குத் தெரியுமோ!









அவையளுக்குத் தெரியுமோ!

ஆன்பே வானலைகளில் இனிய பாடல் இசைக்கிறதே!
தொலைக்காட்சியில் இனிய ஒலிபரப்பு நடக்கிறதே!
அலைபோல் பரவியதா எம்வீட்டுத் திருமணச்செய்தி!
நிலையாக இன்றிக் காற்று தென்றலாய் வீசுதே!
இலைகளெல்லாம் அசைந்து வாழ்த்துக் கூறுகிறதே!
இவைகளுக்குத் தெரியுமோ நம்வீட்டுத் திருமணச் செய்தி!

பெற்றோருக்குப் பெருமை பிள்ளைகளின் திருமணம்
உற்றாருக்குப் பெருமை ஊரில் ஒரு திருமணம்
நாம்காத்திருந்த இன்ப வேளை வந்தது
நல்ல சேதி காதில் இன்பம் ஓதுது
அன்புச் சிறையிலிpருந்து அகம் மகிழ்ந்த
பண்புச் சிறை காக்கப் படியேற்றம்.

துன்பச் சிறையாம் அன்னிய கலாச்சாரத்தில்
இன்பச் சிறை, கலாச்சார பலம் திருமணம்.
வாழ்வு வழுகாது இறுக்கும் வச்சிரம். திருமண்ம. 
தாழ்வை நோக்காது வாழ்விலுயரத் திருமணம்.
தானாகக் கனிய வேண்டும் திருமணம்
தேனாகப் பாலாகத் தித்திக்க வேண்டும் திருமணம்.

23-1-2003
தமிழ் அலை கவிதை பாடுவோம்.(லோகதாஸ்)





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

602 (1102) பெட்டகோ பட்டம்!

                நான் 1990 ல் இருந்து 1993 வரை படித்த செமினாறியக் கட்டிடம் இடித்து தொடர் மாடியாகக் கட்டி பலர் குடியிருக்கின்றனர். வாகனத்தில் ...