முத்தமிழ்சாரல் (கவிதைகளின் கருவூலம்) 12-7-25
.(பரக்குதல் - அலைந்து திரிதல்
பிரக்கினை – உணர் வு. அறிவு.
பாவகன் - தூய்மையானவன்.
பாலனன் - காப்போன்.)
தலைப்பு----
இரக்கமில்லா மனிதர்கள்
00
இரக்கமில்லா மனிதர்கள் அரக்கர் அருவருப்பாளர்
சுரக்காத மனிதநேயம் தரக்குறைவான பிறப்;பாகும்.
விரக்தியில் பெண்ணைப் பாலகரைப் பேணாது
விரோதித்தால் வாழ்வு சுடுகாடாகும் உண்மை
00
பரக்குதல் இன்றி பிரக்கினையோடு அரவணைத்தால்
பார் போற்றும் இரக்கமுள்ள இறையாவான்.
பாதிப்பின்றிப் பாலனனாய் உலகை மலடாக்காமல்
புவியைப் பாவகனாய் நந்தவனமாய் மாற்றுவான்
00
வேதா. இலங்காதிலகம். தென்மார்க். 8-7-2025



Vetha Langathilakam
பதிலளிநீக்குகணேசன் கார்த்திகேயன்
Vetha Langathilakam
வாழ்த்துகள்
8-10-2025
Vetha Langathilakam
Mikka Nanry Urave!
8.10.25
Vetha Langathilakam
M.A. Ramamoorthy
அருமை..
“பரக்குதல் இன்றி பிரக்கினையோடு அரவணைத்தால்” — இதில் ஒரு ஆழமான உணர்வு இருக்கிறது.
👉 “பரந்து காணப்படாமல் (அதாவது வெளிப்படையாக காட்டாமல்), உள்ளார்ந்த பிரக்கினையுடன் (உண்மையான, தன்னிலக்கணமான பாசத்துடன்) அரவணைத்தால் ....
Vetha Langathilakam
M.A. Ramamoorthy மிக்க நன்றி.
வாழ்க வளர்க!!!!!!!
8-10-2025