சனி, 7 செப்டம்பர், 2019

176 (748 ) ஏழைக்கேத்த எள்ளுருண்டை!








ஏழைக்கேத்த எள்ளுருண்டை! 

நாணிட வேண்டிய விடயம்
பேணிப் பாதுகாக்காத விளையாட்டிடம்!
ஆணி களட்டிய பலகையது
ஆணிக்கையாகத் துணிந்து ஆசனமாக்கியது.

பட சட்டத்தின் நடுவில்
அடக்கிக் கட்டி, அமர்ந்து
படபடப்பின்றி ஆடுகிறான் ஊஞ்சல்!
அடடா! ஏழைக்கேற்ற எள்ளுருண்டை!

விழுந்திடாது பிடிக்கும் உறுதியும்
வழுகும் பலகையைக் கால்களால்
அழுத்தும் சாதுரியச் சிரிப்பும் 
வாழ்வின் சவாலின் ஏற்பு!

துள்ளும் மகிழ்வில் ஆடுகிறான்
உள்ளதை வள்ளிசாக அனுபவித்துப்
பிள்ளைகள் மகிழ்வாரவர் குணமது!
அள்ளும் வாழ்க்கைப் பாடமது!

பிள்ளைகள் விளையாட்டிடத்தை வளமாக
பிரிதியுடன் பராமரித்தல் அவசியம்
பிற்போக்கு நிலைமை மாறட்டும்!
பிரதான கடமை மேலிடத்திற்கு! 

(ஆணிக்கை - உறுதி)

9-1-2016.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

568 (1068) sanrithal - (பெண்மை) யாதுமாகி நின்றவள் பெண்ணே!

                 (பெண்மை)    யாதுமாகி நின்றவள் பெண்ணே!   - ( தேன்தமிழ்க் கவிவனம். சர்வதேச மகளிர்தினச் சிறப்புப் பேட்டி.) 00 (குமைதலின்றி – ...