Vallamai Photo poem - 31
எத்தனை சொல்லியும் அம்மாவின் பிடிவாதம்!
இத்தனை பாரம்! செய்த தலையலங்காரம்.!
மொத்த முகப்பூச்சும் சேர்ந்து அம்மாடியென்
சத்தெல்லாம் இழந்ததாய் களைப்பு! அலுப்பு!
இந்த நள்ளிரவில் படத்திற்கு நிற்பது
எந்தப் பிள்ளைக்குத் தரும் மகிழ்விது!
சொல்லுங்கள்! எனக்கு ஆனந்தம் தரவில்லை
வெல்லுங்கள் பிடிவாதத்தாலல்ல அன்பால் எங்களை!
மழலையரின் இன்றைய நிலையைத் தன் கவிதையில் எதார்த்தமாய்ப் பேசியுள்ள திருமிகு. வேதா. இலங்காதிலகத்தை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்ந்தெடுக்கின்றேன். பாராட்டுக்கள் கவிஞரே!
28-9-2015


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக