சனி, 7 செப்டம்பர், 2019

170. (742) இரட்சகன் தீர்ப்பு.




                                                                                  



 இரட்சகன் தீர்ப்பு.

மேட்டுக் காணி நோக்கியே
காட்டு வழியென்று ஆண்டவனையே
கேட்டுச் செல்கிறேன், எஞ்சிய 
பட்டுச் செல்வங்களுடன் புனர்வாழ்விற்கு!
எட்டுவேன் என்னால் இயன்றவரை!

எசமானின் பிள்ளையோடென் பேரனையும் 
நிசமாக உயிராய் வளர்ப்பேன்!
உப்பிட்டவரை உள்ளளளவும் நினையென்று
செப்பியது அன்று உண்மையோ!
தப்பாத ஒரு தருணமிதோ!

பிரளய வெள்ளம் ஊரோடென்னையும்
புரட்டிப் போட்டது எதுவுமின்றி.
இரண்டு செல்வங்களோடு என்னையும்
அரங்கநாதன் வாழச் செய்கிறான்!
இரட்சகனின் தீர்ப்போடு செல்கிறேன்!


9-12-2015




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

602 (1102) பெட்டகோ பட்டம்!

                நான் 1990 ல் இருந்து 1993 வரை படித்த செமினாறியக் கட்டிடம் இடித்து தொடர் மாடியாகக் கட்டி பலர் குடியிருக்கின்றனர். வாகனத்தில் ...