இனிய நந்தவனம் இதழ் ( இந்திய சிற்றிதழ்) கார்த்திகை மாதம்
கம்போடியா இதழாக - வெளி வந்தது. இதில் கம்போடியா பற்றிய
சிறு கட்டுரை நான் எழுதியது பிரசுரமாகி உள்ளது. இங்கு பதிகிறேன் .
இனிய நந்தவனத்திற்கு நன்றி.
(கம்போடியா சிறு விவரணம்
கம்போடிய வரலாறு நாகரீகங்கள் மலராத மக்கள் ஒன்றாக வாழ்ந்த சமூகமாக இருந்த புரோட்டோ சரித்திர காலத்திலிருந்து தொடர்ந்து வருவதாகும். கம்போடிய மன்னர்களின் பட்டியல் பதின்நான்காம் நூற்றாண்டில் முடிவடைகிறது. ஆரம்பத்தில் கம்பூச்சியா என்றது கம்போடியாவாக மாறுபட்டது.
தென்கிழக்கு ஆசிய பிரதான நிலத்தில் உள்ள நாடு. வடமேற்கில் தாய்லாந்து – வடக்கே லாவோஸ்- கிழக்கில் வியட்நாம் தென்மேற்கில் தாய்லாந்து வளைகுடாக்கள் எல்லைகளாக உள்ளது.
இங்கு பதின்நான்கு மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். கி.பி.802ல் இரண்டாம் யெயவர்மன் தன்னை அரசனாக அறிவித்து சென்லாவில் போரிடும் கெமர் இளவரசர்களை - கம்புஐhம் - என்ற பெயரில் ஒருங்கிணைத்தார்.
இதுவே கெமர் பேரரசின் தொடக்கம். முதலில் இந்து மதமாகவும் பின்னர் பௌத்தமும் தென் கிழக்கு ஆசியாவில் பரவ உதவியது.
இரண்டாம் உலகப் போரின் போது ஐப்பானிய ஆக்கிரமிப்புக் காலத்திற்குப் பிறகு 1953ல் நாடு சுதந்திரம் பெற்றது. நாடு 25 மாகாணங்களாகப் பிரிக்கப் பட்டது.
ஊத்தியோகபூர்வ – தேசிய மொழி கெமர் மொழி.
மதம் தேரவாத பௌத்த மதம்.
மன்னர் நேரோடாம் சிஹாமோனி
நாணயம் - கம்போடிய றியல். தலைநகரம் - புனோம் பென்.
ஆடைத்தொழில் மிக முக்கியமானது. எண்பது விகிதம் ஏற்றுமதியாகிறதாம். இரண்டாவதாகச் சுற்றுலாத்தொழில் இடம் பிடிக்கிறது. நல்ல கடற்கரைகள் சுற்றுலாப் பயணிகளைக் கவர்கிறது.
இவர்களது எழுத்துநடை பல்லவர் காலத்து எழுத்துநடையாக உள்ளதாம்.
அங்கூர்வாட் இந்துக்கோயில் இரண்டாம் சூரியவர்மன் கம்போடிய மன்னனால் கட்டப்பட்டது. வாட் என்பது கோயில். தமிழர் கட்டிடக்கலை பல்லவர் சோழர் வணிகர்கள் மூலம் இந்தியாவை ஒத்ததாக உள்ளது. இராமாயணமும் இராம்கர் என்ற பெயரில் கம்போடியாவில் உள்ளது என்று ஆhய்வில் சொல்கிறார்கள்.
நடனமும் அதன் ஆடை அமைப்புகளும் மிக கவர்சியானது என்றும் தன்னைக் கவர்ந்ததாகவும் அங்கு சுற்றுலா சென்ற ஒரு நடனமணி சொல்கிறார்.
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வணிகத் தொடர்பு இந்தியாவுடன் இருந்துள்ளது இவர்களுக்கு.
ஓய்வுநிலை முன்பள்ளி ஆசிரியர்
வேதா. இலங்காதிலகம்
தென்மார்க் 4-10-2025)
-------------------------------------