ஞாயிறு, 2 நவம்பர், 2025

534 (1085) 7. நாலடியார் 25ம் அதிகாரம் அறிவுடைமை.

   

          


7.  நாலடியார் 25ம் அதிகாரம் -  அறிவுடைமை.

       


(மூன்றாவது இன்பவியல்.

00

மனதிலே மகிழ்ச்சியை அடைதல் 

அம் மகிழ்ச்சி பொருளாலும் உறவினர்

நண்பினராலும் பெறப்படுவதால் இது பொருட்பாலில்

நட்பியலுக்குப் பின் வைக்கப் பட்டது.)


7.  நாலடியார் 25ம் அதிகாரம் அறிவுடைமை.


உணர வுணரு முணர்வுடை யாரைப்

புணரப் புணருமா மின்பம் - புணரின்

றெரியத் தெரியுந் தெரிவிலா தாரைப்

பிரியப் பிரியுமா நோய்.


உணர உணரும் - நன்மை தீமைகளை அறியும்படி ஆராயும் உணர்வு உடையாரை – அறிவினையுடையவரை  புணர – நட்புக் கொள்ள  இன்பம் புணருமாம் - பல வித இன்பங்களும் பொருந்தும்.  தெரிய தெரியும் -  நூற்பொருள்களை அறியும்படி ஆராயும்.   தெரிவு இலாதாரை – அறிவில்லாதவரை.  புணரின் - ஆராயாமல் நட்புக் கொள்ளின் நோய் பிரியும் - அவருறவால் உண்டாகிய துன்பமும் நீங்கும்.

       



எனது வரிகள்:- 


எண்ணற்ற நூல் கருத்துக்களை ஆராயும்

நுண்ணிய அறிவுடையாரை உறவு கொண்டால்

எண்ணிறைந்த இன்பங்களும் சேர்ந்திடும்.

அறிவற்றவரை நூற் கருத்துக்களை ஆராயாதவரை

அறியாது உறவு கொண்டால்  அவரை

விட்டு விலகினால் அவரால் வரும் 

துன்பங்களும் விலகிடும்.

-------------------------------    

வேதா. இலங்காதிலகம். தென்மார்க்  2-11-2025



              



1 கருத்து:

  1. Vetha Langathilakam
    Nanry Pass many for like
    3-11-2025
    Vetha Langathilakam
    Thank you for like sis srinivasalu...
    3-11-25
    Rama Sampanthan
    சிறப்பு வாழ்த்துகள்
    3-11-25
    Vetha Langathilakam
    Rama Sampanthan Mikka nanry bro 3-11-2025
    4-11-2025

    பதிலளிநீக்கு

568 (1068) sanrithal - (பெண்மை) யாதுமாகி நின்றவள் பெண்ணே!

                 (பெண்மை)    யாதுமாகி நின்றவள் பெண்ணே!   - ( தேன்தமிழ்க் கவிவனம். சர்வதேச மகளிர்தினச் சிறப்புப் பேட்டி.) 00 (குமைதலின்றி – ...