வியாழன், 27 நவம்பர், 2025

541 (1061) 8.(248) நாலடியார் 25ம் அதிகாரம் அறிவுடைமை.

 

        8.(248)  நாலடியார் 25ம் அதிகாரம் அறிவுடைமை.

       



(மூன்றாவது இன்பவியல்.

00

மனதிலே மகிழ்ச்சியை அடைதல் 

அம் மகிழ்ச்சி பொருளாலும் உறவினர்

நண்பினராலும் பெறப்படுவதால் இது பொருட்பாலில்

நட்பியலுக்குப் பின் வைக்கப் பட்டது.)


8.(248)  நாலடியார் 25ம் அதிகாரம் அறிவுடைமை.


நன்னிலைக்கட்    டன்னை  நிறுப்பானுந்  தன்னை

நிலைகலக்கிக்   கீழிடு   வானு   நிலையினு

மேன்மே  லுயர்த்து  நிறுப்பானுந் தன்னை

தலையாகச் செய்வானுந் தான்.


தன்னை நல் நிலைக்கண் - தன்னை நல்ல நிலையிலேயே   நிறுப்பானும்- நிறுத்த வல்லவனும்

தன்னை நிலை கலக்கி - தன்நிலையிலும் தன்னைக் கலங்கச் செய்து.   கீழ் இடுவானும் - கீழ்ப்பட்ட நிலையில்  வைப்பவனும்

மேல் மேல் உயர்த்து நிறுப்பானும் - மேலும் மேலும் உயர்ந்த நிலைமையில் உயரச் செய்து நிறுத்த வல்லவனும். தலையாகச் செய்வானும் - யாவர்க்கும் உயர்ந்து  தலைவனாகச் செய்யும் ஆற்றலுடையவனும் - தான்- தானேயன்றிப் பிறரொருவனல்ல


          



எனது வரிகள்:-


தன்னை நல்ல நிலையில் வைப்பவனும்

தன் நிலை கலங்கிக் கீழிறங்குபவனும்

இன்னும் தன்னிலையிலும் மேலே உயர்பவனும்

தன்னைத் தலைவனாக்கும் திறனுடையவனாதலும்

தானே தான் வேறொருவரல்லர்.

---------------------------------    


வேதா. இலங்காதிலகம் - தென்மார்க். – 27-11-2025



                



2 கருத்துகள்:

  1. Manjula Kulendranathan
    Well Done Applause Sticker
    29-11-2025
    Pathmanathan Viny
    பாராட்டுகள்.

    Vetha Langathilakam
    Pathmanathan Viny mikka nanry sis---5-12-2025

    பதிலளிநீக்கு
  2. Manjula Kulendranathan
    Well Done Applause Sticker

    Pathmanathan Viny
    பாராட்டுகள்.
    29-11-2025
    Vetha Langathilakam
    Pathmanathan Viny mikka nanry sis---5-12-2025

    பதிலளிநீக்கு

568 (1068) sanrithal - (பெண்மை) யாதுமாகி நின்றவள் பெண்ணே!

                 (பெண்மை)    யாதுமாகி நின்றவள் பெண்ணே!   - ( தேன்தமிழ்க் கவிவனம். சர்வதேச மகளிர்தினச் சிறப்புப் பேட்டி.) 00 (குமைதலின்றி – ...