வேதாவின் வலை 1 ல் - 22 அஞ்சலிப்பாக்கள்.
வேதாவின் வலை 2ல் - 15 அஞ்சலிப் பாக்கள்
இனி இங்கு முதலாவது...என தொடங்குகிறேன்.
1. ஆனந்தமகேசனின் அம்மா.
அம்மாவின் நூறாவது பிறந்ததின நினைவுநாள் 2-9-1925
தன்னுடலிற்குள் இன்னொரு உயிரை வைத்து
இன்னுயிர் கொடுத்து வலியோடு கருவேந்துபவள்
அன்புத்தாய்! - எங்கள் அம்மா காரைதீவு
ஆறுமுகம் கனகம்மா கந்தவனம் கனகம்மாவாகி
எம்மை ஈன்றவரின் நூறாவது பிறந்ததின
நினைவு நாள்.(2025)
இன்று மட்டுமல்ல காலம் முழுதும் உங்கள் நினைவுகளை-
அணைப்புகளை - வார்த்தைகளை மறக்காது வாழ்கிறோம்.
உங்கள் ஆத்மா அமைதியடையும் போது
உங்களைக் கருணையோடு நாம் நினைக்கிறோம்
குளிர்நீராக உங்கள் நினைவு பாய்ந்து
எங்கள் இதயப்பைகளை எப்போதும் நிறைக்கிறது.
மானுடத்தின் தாகம் தணிக்கும் உயிர்நதி!
துன்பமுறும் மானுட இதயத்தை அமைதிப்படுத்தும்
அற்புதக்கொடை அம்மாவை வணங்குகிறோம்! சாந்தி!


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக