வெள்ளி, 14 ஜூன், 2019

105 . (684) சிந்தனை செய் மனமே






சிந்தனை செய் மனமே

கந்தனை கடவுளை இனிதாய்
வந்தனை எய் மனிதா
நிந்தனை எண்ண மின்றி
நொந்து உனை இழக்காது
சிந்தனை செய் நல்லதை.

சிந்தனையால் வாழ்வு சிறக்கும்.
சுதந்திரச் சிறகு விரிக்கலாம்.
தந்திரச் சினமொதுக்கி அன்பணைத்து
மந்திர நம்பிக்கை ஊன்றி
முந்திடலாம் நற் செயலாக்க.

மரங்களைப் பெருக்கிடு மழைக்காக
கரங்களை நீட்டிடும் கருமுகில்கள்.
தரமோடு சுகாதாரம் பேண
உரமான அறிவு பெருக்க
வரமாகட்டும் என்று சிந்திப்போம்.

22-6-2018

வேறு

மாயமாளிகை மனதைத்
தூயதாய் வைத்திருக்கக் கனத்த
ஆயனம் (கிரகணம்) பிடிக்காதிருக்க நல்
தூய சிந்தனையே தேவை
ஆர் வென்றார் மனதை
ஆய்வுக்கும் அப்பாற்பட்டது


25-20-2019



1 கருத்து:

  1. பிச்சிப் பூ :- சிறப்பு மா
    2018
    Vetha Langathilakam:- மிக மகிழ்ச்சி ஆழ்ந்த அன்புடன்.

    பதிலளிநீக்கு

602 (1102) பெட்டகோ பட்டம்!

                நான் 1990 ல் இருந்து 1993 வரை படித்த செமினாறியக் கட்டிடம் இடித்து தொடர் மாடியாகக் கட்டி பலர் குடியிருக்கின்றனர். வாகனத்தில் ...