புதன், 19 ஜூன், 2019

111. (690) உனக்கு நான்!






உனக்கு நான்! 

சௌபாக்கியமாய் பழத்தட்டோடு வெகு
சௌக்கியமாய் புன்னகைக்கும் சிலையே
சௌமியமான உன்னுருவில்   நான்
சமைந்தது உண்மையே மச்சியே

அமைதிக் கண் வீச்சில்
தூண்டில் மீனானேன். தந்தக்
கரங்கள் தாங்கிய தட்டுச்
சாயாது தங்கமே கவனமடி!

அத்தானுன் கண்ணிலிருந்து மறையேன்!
சித்தம் கலக்குமுன் புன்னகையில்
மொத்தமய் சிதறுகிறேனடி  சிங்காரியே!
அத்தை பெத்த இரத்தினமே!

உனக்கு நான்!  நீதானடி 
எனக்கு!  சீராக சீர்வரிசையை
கொண்டு சேரடி! மாலையில்
நான் வருவேன் மறக்காதேடி!

28-6-2016.-





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

602 (1102) பெட்டகோ பட்டம்!

                நான் 1990 ல் இருந்து 1993 வரை படித்த செமினாறியக் கட்டிடம் இடித்து தொடர் மாடியாகக் கட்டி பலர் குடியிருக்கின்றனர். வாகனத்தில் ...