புதன், 19 ஜூன், 2019

111. (690) உனக்கு நான்!






உனக்கு நான்! 

சௌபாக்கியமாய் பழத்தட்டோடு வெகு
சௌக்கியமாய் புன்னகைக்கும் சிலையே
சௌமியமான உன்னுருவில்   நான்
சமைந்தது உண்மையே மச்சியே

அமைதிக் கண் வீச்சில்
தூண்டில் மீனானேன். தந்தக்
கரங்கள் தாங்கிய தட்டுச்
சாயாது தங்கமே கவனமடி!

அத்தானுன் கண்ணிலிருந்து மறையேன்!
சித்தம் கலக்குமுன் புன்னகையில்
மொத்தமய் சிதறுகிறேனடி  சிங்காரியே!
அத்தை பெத்த இரத்தினமே!

உனக்கு நான்!  நீதானடி 
எனக்கு!  சீராக சீர்வரிசையை
கொண்டு சேரடி! மாலையில்
நான் வருவேன் மறக்காதேடி!

28-6-2016.-





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

568 (1068) sanrithal - (பெண்மை) யாதுமாகி நின்றவள் பெண்ணே!

                 (பெண்மை)    யாதுமாகி நின்றவள் பெண்ணே!   - ( தேன்தமிழ்க் கவிவனம். சர்வதேச மகளிர்தினச் சிறப்புப் பேட்டி.) 00 (குமைதலின்றி – ...