என் மனச் சிறையில்.
நன்றாகவும் தீதாகவும் எத்தனை எத்தனை!
சொன்னதும் சொல்லாமல் இருப்பதுவும் எத்தனை!
சொன்னால் துடிப்பார்கள், வெறுப்பார்கள், மகிழ்வார்கள்
சொல்லாவிடிலும் மனம் அமைதியில் மூழ்கும்.
திருடன் திருடியதை மனச் சிறையில்
திறந்து பேசினால் பிடிபட்டுச் சிறையில்.
திருமணம் செய்ததை மனச் சிறையில்
தில்லுமுல்லாக மறு திருமணங்கள் உலகில்.
பெற்றவர் காலம் முடிந்தும் நாளும்
பெட்டகமெனும் என் மனச் சிறையில்
கொற்றவராய் வீற்றிருந்து வழி நடத்தும்
பேறு கொண்டது என் வாழ்வு.
பால காலத்து முழு நினைவுகளும்
பாடமாக மனச் சிறையில் திரும்ப
நீளப் படற்களாக ஓடுவது மறக்க
முடியாத உயர் நினைவுகள் வாழ்வினிலே.
3-6-2016

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக