
உமிக் கரி
வரம் கொடுத்தால் இறைவன் வரத்தைத்
தர மறுப்பதில்லை கொடுத்ததைத் திரும்ப
எடுப்பது இல்லை. மனிதன் கொடுக்கும்
வரத்தை தான் மாற்றி அமைக்கிறான்!
00
நெல்லின் கோதுகள் (உமி) நெருப்பிட்ட தணலில்
நல்ல பதமாகச் சுடுபடுவதால் இதமாகப்
பல் விளக்கக் கரியானது. உள்ளங்கையிலிட்டு
எல்லாப் பொழுதும் அக்காலத்தில் பாவித்தோம்.
00
அதிகாலையில் எழுந்ததும் உமிக் கரியால்
ஆறுதலாகப் பல்துலக்கி முன்வளவில் நடந்து
அது வேறொரு சுக அனுபவம்
மெதுவாகத் தொலைந்த சொர்க்கம் அது!
00
செந்தணல் கவி –வேதா. இலங்காதிலகம். தென்மார்க்-31-7-2025



Sarvi Kathirithambi
பதிலளிநீக்குநல்லினிய மறக்க முடியாத நினைவூட்டாலாக இருக்கிறது
அக்கா.... வாழ்த்துக்கள்..
20-8-2025
Pss Manian
பதிலளிநீக்கு. ஓ... 👌 அருமையான வரிகளில் ஒரு அழகு கவிதை.! 🌹 🌹
20-8-2025
Pss Manian Mikka nanry. Mkilchchy.....urave!!!!!!