சனி, 11 ஏப்ரல், 2026

574 (1074) சுயநலங்களால் நிகழும் உலகு

 

     


 

  சுயநலங்களால் நிகழும் உலகு

00

தன்னைத் தானே புளுகும் நிலை

சின்ன அறிவா  பெரும் அறிவா!

பின்னும் காந்த அறிவா!உலகம் 

என்ன சொல்லினும் உண்மை அல்ல

இன்ப மயமானது உலகல்ல பொய்யே!

00

அவரவர் சுயநலங்களால் உண்மை பங்கப் படுகிறது

சுயநலங்களால் நிகழும் உலகை எப்படிப் பார்க்கிறாய்!

எண்ணங்களின் மொத்தத் தொகுப்பே மனம்

உள்ளம் வசமானால் உலகும் வசமாகும்

எம் மதிப்பீடு எம் இதயமளவில் தான்

00

மனிதன் தன் இருப்பை   விட்டு

மற்றதை மட்டும் கவனிக்கும் போது

தமது போக்கைச் சரி செய்ய வேண்டும்

தமது உண்மை உறவை நினைக்க வேண்டும்

மனவெளியை நஞ்சின்றிப் பாதுகாக்க வேண்டும்

00

நம் பலவீனமே நமக்குத் துன்பமாகிறது.

ஆம் பிறர் பாராட்டு அங்கீகாரத்திற்கு

காத்திருப்பது அடிமைத்தனம் என்கிறார் விவேகானந்தர்.

உன்னை நீயே வேதனைப் படுத்தாதே

இன்பமாய் வாழப் பழகு!

00

கனல்கவி - வேதா. இலங்காதிலகம் -தென்மார்க் - 11-4-2026



       




2 கருத்துகள்:

  1. Janaki Sreenivasulu
    🙏மதிப்பீடு மகத்தானது சகோதரி
    Oh Yeah Yes Sticker by megan motown
    11-4-2026
    Gaithiri Shanmugam
    அழகு அழகுக்கு இனிய காலை வணக்கம்
    12-4-2026
    Vasantha VJ
    உண்மையின் தரிசனம்...
    12-4-2026

    பதிலளிநீக்கு

588 (1088) மாயக் காலம்.

            மாயக் காலம். 00 (கேலம் -விளையாட்டு. சாலகம் - சிலந்திவலை. தாலம் -பனைமரம். நாலா - பள்ளத் தாக்கு.) 00 காலம் ஒரு நீண்ட கனவு ஆலம் ...