சுயநலங்களால் நிகழும் உலகு
00
தன்னைத் தானே புளுகும் நிலை
சின்ன அறிவா பெரும் அறிவா!
பின்னும் காந்த அறிவா!உலகம்
என்ன சொல்லினும் உண்மை அல்ல
இன்ப மயமானது உலகல்ல பொய்யே!
00
அவரவர் சுயநலங்களால் உண்மை பங்கப் படுகிறது
சுயநலங்களால் நிகழும் உலகை எப்படிப் பார்க்கிறாய்!
எண்ணங்களின் மொத்தத் தொகுப்பே மனம்
உள்ளம் வசமானால் உலகும் வசமாகும்
எம் மதிப்பீடு எம் இதயமளவில் தான்
00
மனிதன் தன் இருப்பை விட்டு
மற்றதை மட்டும் கவனிக்கும் போது
தமது போக்கைச் சரி செய்ய வேண்டும்
தமது உண்மை உறவை நினைக்க வேண்டும்
மனவெளியை நஞ்சின்றிப் பாதுகாக்க வேண்டும்
00
நம் பலவீனமே நமக்குத் துன்பமாகிறது.
ஆம் பிறர் பாராட்டு அங்கீகாரத்திற்கு
காத்திருப்பது அடிமைத்தனம் என்கிறார் விவேகானந்தர்.
உன்னை நீயே வேதனைப் படுத்தாதே
இன்பமாய் வாழப் பழகு!
00
கனல்கவி - வேதா. இலங்காதிலகம் -தென்மார்க் - 11-4-2026


Vetha Langathilakam
பதிலளிநீக்குNanry vindy,,,,,,13-4-2026
Janaki Sreenivasulu
பதிலளிநீக்கு🙏மதிப்பீடு மகத்தானது சகோதரி
Oh Yeah Yes Sticker by megan motown
11-4-2026
Gaithiri Shanmugam
அழகு அழகுக்கு இனிய காலை வணக்கம்
12-4-2026
Vasantha VJ
உண்மையின் தரிசனம்...
12-4-2026