ஞாயிறு, 26 ஏப்ரல், 2026

580 (1080) Anchaly gnanam...

 

    






  இன்று  26-4-2026 தமிழ் வான் அவையில் வாசித்தேன்.


(ஞானாசாரியன் - மெய்யறிவு புகட்டும் ஆசான்

ஞானநாயகன் - இறைவன்.

ஞானசரிதன் - ஞானநெறியில் ஒழுகுபவன்.

ஞானசுகம் - இறைவனோடு கலந்த பேரின்ப மகிழ்ச்சி.

ஞானப்புதல்வர்- மாணாக்கர்.)

00

ஞானசேகரன் ஞானசுகம் பெறட்டும்!

00

ஞானம் இதழும் தலைவரும்

ஞானாசாரியனாக இருந்ததும்

ஞானப் புதல்வராக நாமிருந்தோம்.

ஞானநாயகன் ஏனவரை அழைத்தான்!

ஞானசரீரம் அழிந்தாலும்

ஞானோதயத்தை வளர்ப்போம்.

00

மறைவு கேட்டுத் துயரடைந்தேன்.

கண்கள் பனிக்கத் திகைத்தேன்.

என் பல கவிதைகள் ஞானம்

இதழில் அரங்கேறியது மகிழ்ந்தேன்

ஞானசரிதன் ஞானசுகம் பெறட்டும்!

அவரது ஆத்மா  சாந்தி பெறட்டும்!

00

இலக்கிய சந்திப்பில் தென்மார்க்கில்

இனிய ஒருங்கிணைப்பு   2015ல்

முகநூலில் நிழல் படங்கள் காணலாம்.

இறைவனுக்கு நன்றி பொன் தருணத்திற்கு.

00

வேதா. இலங்காதிலகம்.தென்மார்க். 2026- 4-


     



5 கருத்துகள்:

588 (1088) மாயக் காலம்.

            மாயக் காலம். 00 (கேலம் -விளையாட்டு. சாலகம் - சிலந்திவலை. தாலம் -பனைமரம். நாலா - பள்ளத் தாக்கு.) 00 காலம் ஒரு நீண்ட கனவு ஆலம் ...