சனி, 27 செப்டம்பர், 2025

523 (1066) பூதலத்தில் தீதின்றி வாழப் பழகுங்கள்!

 

        பூதலத்தில் தீதின்றி வாழப் பழகுங்கள்!

        







பரந்த வானின் கீழ்

பசுமை பூமி வஞ்சகமற்று

நிரந்தரமாய் அமைந்திருக்கிறது.

வேரது பரப்பவும் இடமின்றி

அரக்கத்தனமாகப் போதைப் பொருள்களை

ஆழப்புதைக்கிறான் ஆறறிவு மனிதன்.

00

பூமகள் அமைதிச் சின்னம்!

பூதேவி பொறுமைத் தாய்! 

பூகண்டத்தைக் குடைகிறாய் போதுமானவரை!

பூவுலகம் சாதுவாகச் சமாளிக்கிறது

பூமியின் மண்ணிறமொழி தடைப்பட்டால்

பூரணமாக மாட்டுப்படுதலே!....நீங்கள்

       தீதின்றி வாழப் பழகுங்கள்!!!!

00

பா வானதி - வேதா. இலங்காதிலகம்  தென்மார்க். 27-9-2025  


              



       


செவ்வாய், 23 செப்டம்பர், 2025

522 (1065) கவிதைப்பள்ளு - 4 --- வாசிக்க மனமின்றி

 

       சமீராவின் கவிதைகளைப் பார்த்தால் மனதில் மகிழ்வு துள்ளாது.

வெறுப்பு மேலிடுவதுண்டு. அந்த உணர்வுகளைத்தான் இங்கு கவிதையாக எழுதியுள்ளேன்.

            


கவிதைப்பள்ளு - 4 

 

வாசிக்க மனமின்றிச் சிறிதும்

நேசிக்க முடியாத பக்கமாக

கூசிடும் வரிகளாகக் கவிதை

வாசிக்க முடியாத ஓலமாக

ஊசியாகும் ஒரு ஈனக்குரல்

00

வன்மம் அருவருப்பும் வெறுப்புமாக

இன்தமிழ் கொப்பளித்து நெளிகிறது

இன்னிசை துளியுமற்ற பனுவல்

ஈன்றவளான மென் மனத்தாள்

ஊன்றும் செந்தமிழ் வரிகளா!

00

ஏன் இப்படி அனலாகத் 

தன்னக வெஞ்சினம் ததும்புகிறது!

உன் மனதை வென்றிட

பன்முக முயற்சி செய்!

வன்சொல்லால் உன்னைக் கடியாதே!

00

மென்சொற்கள் சர்க்கரையாக இனிக்கட்டும்.

வன்சொற்கள் ற்கொலை செய்யட்டும்!

மலிந்த பயனற்ற சொற்கள்

வலிந்து எழுதுதல் விலக்கலாம்

நலிவுடை தீச்செயல்கள் தீயவை

00

அக முக மலர்ச்சியை

மிகவாய்க் கொல்லும் சினம்

மனிதம் உரிக்கப் படுவதாக

புகும் கவிதை கொடுமை!

புனிதம் இழக்கும் நிலையே!

00

பா வானதி .  வேதா. இலங்காதிலகம் -தென்மார்க்- 23-9-2025

                                        


                            

சனி, 20 செப்டம்பர், 2025

521 (1064) 5 - நாலடியார் 25ம் அதிகாரம் அறிவுடைமை


மூன்றாவது இன்பவியல்.

00

மனதிலே மகிழ்ச்சியை அடைதல் 

அம் மகிழ்ச்சி  பொருளாலும் உறவினர்

நண்பினராலும் பெறப்படுவதால் இது பொருட்பாலில்

நட்பியலுக்குப் பின் வைக்கப் பட்டது.


      5

  நாலடியார் 25ம் அதிகாரம் அறிவுடைமை 


400 தனிப்பாடல்களின் தொகுப்பு சமண முனிவர்களால் தொகுக்கப்பட்ட பதினெண்கீழ்க்கணக்கு நூல்களிகளின் ஒன்றான நாலடியார் ஆகும். திருக்குறளுக்கு இணையாகப் பேசப்படுவது. திருக்குறள் இரு வரிகள் நாலடியார் நான்கு வரிகளுடையது. 

                


   

5வது பாடலிற்கு எனது வரிகள் எழுதி இங்கு பதிகிறேன்.

245:-  கடல் சார்ந்து மின்னீர் பிறக்கு மலைசார்ந்து

          முப்பீண் டுவரி பிறத்தலாற் றத்த

          மினத்தனைய ரல்ல ரெறிகடற்றண் சேர்ப்ப

           மனத்தனையர் மக்களென் பார்.


எறிகடல் - அலைகளை வீசும்     தண் சேர்ப்ப – குளிர்ந்த துறையுடைய  அரசனே!.  உப்பு ஈண்டு உவர் - உப்பு சுவை மிகுந்த உப்பு நீர். அனையர் அல்லர் - ஒத்தவரல்லர். மனத்து அனையர் - அறிவின் தன்மையே உடையவராவர்.


எனது வரி :-


குளிர் அலைகள் வீசும் துறையுடையவனே!

குணம் நடத்தைகள் மானுடரின் இனத்தாரை

அணைந்தது அல்ல தம் அறிவையொத்தது.

இனிய அருவி மலையைச் சார்ந்தாலும்

உப்புடை உவர் நீர் உருவாகும்

உப்புச் சுவைக் கடல் சார்ந்தும்

இனிய சுவை  நீர் உருவாகும்.

------------      

கவிச் சிகரம்     வேதா. இலங்காதிலகம்.  தென்மார்க் 20-9-2025   


         


                           


புதன், 17 செப்டம்பர், 2025

520 (1063) இயற்கை - 1 பூகம்பம்.

 

     

இயற்கை  தலைப்பில் - வேதாவின் வலை 1  ல் 78 கவிதைகளும் 

வேதாவின் வலை 2 ல்  95 -கவிதைகளும்

பதிந்துள்ளேன். இனி ஒன்றிலிருந்து ஆரம்பம் இந்த வலையில்

இந்த இணையத்தில்.    


 2015ல் எழுதிய அன்றைய நிலைக் கவிதை இது



1 -  பூகம்பம்.


ஆதி மௌரிய குப்த

இராச்சியத்தின் கீழாக இருந்த

இமாலய இராச்சியம் என்ற

நேபாளம் இன்று கிலியுள்.

ஏழைமை புத்த நாடன்று

முப்பத்தெட்டு விகித வறுமை

காட்மண்டு தலைநகர் கொண்டு

காத்திரமான பாதிப்பு பூகம்பம்.


பூமிக்கடி அழுத்தம் அதிகரித்து

பூமிப் பாளங்கள் அசைவால் (அதிர்வால்)

புவி நடுங்கப் பூகம்பமென்கிறோம்.

மூவித நில நடுக்கம்

சாதாரண முறை, மேற்தள்ளல்

முறை, சமாந்தர அசைவென

மானுட வாழ்வைப் பாதித்து

பல்லுயிர் அழிவுச் சேதமாகிறது.


சாதாரணமாகக் கூறும் பூகம்பம்

பல்லுயிர் காவு கொண்டது.

பாரிய சேதம் சோகம்!

பன்னாட்டு உதவிகள் விரைகின்றன.


ஓன்பது மாடித் தரஹரா

கோபுரம் ஒன்றுமில்லாது சரிந்தது.

சோதனைகள், சோகம் விலகட்டும்.

சோதிக்கும்  இயற்கை அமைதியாகட்டும்.


பா வானதி -  வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்    27-4-2015.

பிரசுரிப்பு - 17-9-2025


            



              

திங்கள், 15 செப்டம்பர், 2025

519 (1062) ஊடகம் - ஜீவநதி - குடத்து விளக்காகவல்ல

 

      



                          



                  




                       


518 (1061) ஊடகம் - தாய்மொழி தமிழா!

 

       தாய்மொழி தமிழா?

எழுதியவர் க. இலங்காதிலகம்.

இரண்டு இதழில் வந்த கட்டுரை  





              


       

                            



                    


                   



                                   



              


517 (1060) நோய்

 


                                            


 சொல்லாமல் வரும் நோய்

கொல்லாமல் கொல்லும்! பேய்!

புல்லாமல் போகாது.   பாய்

நில்லாமல் விரிக்கும்! மாய்!

வெல்லாமல் விடாதே! தீய்!

june  - 23-2014



                                        


516 (1059) வாழ்த்துகள்-3 - ஐம்பத்திநான்காவது மணநாள்.

 

            


            


ஐம்பத்திநான்காவது மணநாள்.


ஐம்பத்து நான்கு திருமண ஆண்டு

ஐக்கியமாக நீண்டது அருமை அருமை

ஐசுவரியத்திற்கும் குறைவென்று சொல்ல இயலாது

ஐங்கரன் அருள் நாளும் இணையட்டும்

00

வாழ்த்திடும் வழமை அழிந்தொழியும் காலம்

ஆழ்ந்த அன்பாய் வாழ்த்தினாலும் அன்பைத்

தாழ்வாய் எண்ணும் காலம் இது

வாழ்த்துவேன் நாளும் நீடு வாழ

00

வெயில் மழை புயலிலும் ஒன்றாகத்

துயிலாது பயணித்தோம் இறை அருளால்

மயிலாக ஆடி மகிழ்ந்து ஒன்றாக

குயிலாகப் பாடிக் களிப்பேம் இன்பமாக.

00

வேதா. இலங்காதிலகம்  - டென்மார்க் 21-7-2021



515 (1058) uudakam . மொழியைக் கட்டி எழுப்பும் பங்கு என்பது

 

      



 
         
             



        





 

           


 

      


 


      





514 (1057) uudakam - vanpathy....

 

       வேதாவின் வலை -1    ல்    பெண்மை தலைப்பில்

இது  20 வது கவிதையாக  பதியப்பட்டுள்ளது. 

வான்பதிக்காக மறுபடி  இங்கு பிரசுரித்துள்ளேன்.






அலங்காரப் பதுமையோ அறிவுச் சுடரோ!

உளம் திறந்து பழகாமல்
உணர்வுகள் உள்ளே உறைந்திட
உதட்டை இறுக மூடுபவளே!
உதட்டுச் சாயமிட்டு மறைப்பவளே!
உனது திறமை வீணே
உறைபனி யாகிறது தானே!

உறைந்து போவதில் என்ன
உல்லாசம்   உனக்குப் பெண்ணெ!
முழுதாய் நாலு வார்த்தை பெற
மூடிய உதட்டைத் திற!
ஆர்வம் நிறை விழிகளால்
அகலத் திறந்து பார்!

சேலைக் கேற்ற மாலை
மாலைக் கேற்ற காதணி
வேளைக் கேற்ற தலையலங்காரம்
விலையோ அளவற்றவுன் திறமைக்கு!
அலங்காரப் பதுமை யல்ல
அறிவுச்சுடர் நீ! – பிறர்

அகவிதழ் திறக்கச் செய்!
அறிவெனும் அகல் விளக்கையேற்று!
சிறுமைப் படுத்திச் சீண்டுவோரை
சிந்திக்கச் செய் பெண்ணே!
சிந்தனையை ஓட விட்டு
சிலிர்த்து எழு பெண்ணே!

 
 பா வானதி வேதா. இலங்காதிலகம். டென்மார்க் - 2-12-2001.

தமிழ்சேவை ஓல்போ ஆண்டு ஒன்று- வான்பதி –
இதழில் பிரசுரமானது..




 



ஞாயிறு, 14 செப்டம்பர், 2025

513 (1056) வாழ்க்கையை வாழ்!

 

     வாழ்க்கையை வாழ்!

     



கட்டுப்பாட்டுச் சிறகுள் வளர்ந்த 

பெட்டைக் குருவிகள் கிளர்ந்து

வட்டம் என்ற சுதந்திரத்தால்

விட்டு விரிப்பதேன் சிறகை!


மேற்கத்திய பண்பாடு கண்டு

ஏற்பென எண்ணும் மயக்கமா!

சேற்றில் நெல் விளையும்.

சேற்றில் அப்பிள் விளையாது!


வெறுத்துக் குடிப்பதால்; யாரும்

வெள்ளையராக மாற முடியாது 

எடுத்தெறியாது அனுசரித்தால் திறமையாய்

எச்சிற்படுத்தாது வாழ்வை வாழலாம்!



பா வானதி வேதா. இலங்காதிலகம். - டென்மார்க்.  7-12-2014


                   



         




வியாழன், 11 செப்டம்பர், 2025

512 (1054) வல்லமை இணையத்தளம் என்னை ஒரு வாரக் கவிஞராக்கிய நேரம்

 

      ( https://www.vallamai.com/?p=56845&cpage=1)

8 thoughts on "படக்கவிதைப் போட்டி 9-இன் முடிவுகள்"

  1.  வெற்றியாளர்களுக்கு  வாழ்த்துக்கள்….!!

  2. நெஞ்சை நெகிழ வைத்த கவிதைகள். கண்களை கலங்க வைத்த கவிதைகள்.

    விடியல் வரவேண்டும் வாழ்க்கை ஒளிர வேண்டும். நம்பிக்கைதான் வாழ்க்கை நல்லது நடக்கும்.

  3. அருமைச் சகோதரி மேகலா இராமமூர்த்தி அவர்களுக்கும், சிறந்த கவிஞராகத் தெரிவு செய்யப்பட்ட திருமிகு. வேதா. இலங்காதிலகத்திற்கும், சிறந்த பாராட்டுதலைப் பெற்ற திரு. எஸ். பழனிச்சாமி அவர்களுக்கும், 

    என் நெஞ்சார்ந்த பாராட்டுகளும், அவர்தம் கவியால் அனைவரின் உள்ளத்திலும் ஏகியதற்கு நன்றியையும் காணிக்கையாக்கி,

    ஏனைய சக கவிஞர்களுக்கு ஊக்கத்தையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து

    அடுத்ததொரு புனைவுக்கு புத்துணர்வோடு தங்களின் எண்ணங்களைத் தருவதற்கு மகிழ்ச்சியுடன் வரவேற்று காத்திருக்கிறேன்.

  4. வெற்றியாளர்களுக்கு என் இனிய வாழ்த்துகள்

  5. வல்லமை – இவ்வாரக் கவிஞராகத் தேர்வு. 
    அதில் நாடும் சேர்ந்து என்னை அழ வைத்து விட்டீர்கள்.
    என்னை; சரி செய்யச் சிறிது நேரம் சென்றது.
    வல்லமைக் குழுவினருக்கு மனமார்ந்த நன்றி உரித்தாகட்டும்.
    மிக்க மகிழ்வு. மே 2ம் திகதி எனக்கொரு பாராட்டு விழாவை நமது நகர் தமிழ் சங்கம் முன்னெடுக்கிறது. அதோடு இதுவும் மகிழ்வு தருகிறது. 
    மறுபடியும் நன்றி.

  6. இந்த வாரத்தின் சிறந்த கவிஞராகத் தேர்வு பெற்ற கவிஞர் வேதா. இலங்கா திலகம் அவர்களுக்க்கும், பாராட்டு பெற்ற கவிஞ்ர்களுக்கும் உற்சாகத்துடன் பங்கேற்ற அனைத்து கவிஞர்களுக்கும்  வாழ்த்திய நல் உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.

    என்னைi இந்த வாரத்தின் பாராட்டுக்குரிய கவிஞராகத் தேர்ந்தெடுத்த அருமைச் சகோதரி மேகலா ராமமூர்த்தி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

511 (1053) வாழ்த்துகள். 2 - மனமினிக்கும் வாழ்த்துகள்

 


      



மனமினிக்கும் வாழ்த்துகள் -  september -11-2022


மாண்பேற்கும்   மானுடத்   திறன்

வீண்வழியேகாது வித்தகமாகட்டும்!

நாண் மதியாய்  ( முழுநிலவாய்)  வளரட்டும்!

நாண் மலராய் (அன்றலர்ந்த பூ)  விரியட்டும்! 

வேதா. இலங்காதிலகம் - டென்மார்க் 23-12-2021

00

"..வானளவு வளவாழ்வு

வாழ்த்தளவு மனமகிழ்வு

தேனளவு நாளினிமை

தென்றலன்ன சொற்குளிர்மை

கானளவு தொடர்செழிப்பு

கனியளவு உறவினிப்பு

நானிலமே போற்றுமாறு

நனிசிறந்து வாழ்கவென்று

இனிய பொங்கல் திருநாளில்.."

mgudeswaran ---14-1-2022

00


       


செவ்வாய், 9 செப்டம்பர், 2025

510 (1052) 4. நாலடியார் - அறிவுடைமை

 

நாலடியார்  அறிவுடைமை- முதல் 3 அதிகாரங்களும் 

வேதாவின்வலை -2ல்   வலையேற்றியுள்ளேன்.

4 ல் இருந்து இங்கு தொடருகிறது.


(மூன்றாவது இன்பவியல்.

00

மனதிலே மகிழ்ச்சியை அடைதல் 

அம் மகிழ்ச்சி  பொருளாலும் உறவினர்

நண்பினராலும் பெறப்படுவதால் இது பொருட்பாலில்

நட்பியலுக்குப் பின் வைக்கப் பட்டது.)


25ம் அதிகாரம்

4.    நாலடியார் - அறிவுடைமை

(தேடி ஆராய்ந்து எழுதுபவை முகநூலில் - இணையத் தளத்தில் பதிவது ஆவணமுமாகலாம்.)


400 தனிப்பாடல்களின் தொகுப்பு சமண முனிவர்களால் தொகுக்கப்பட்ட பதினெண்கீழ்க்கணக்கு நூல்களிகளின் ஒன்றான நாலடியார் ஆகும். திருக்குறளுக்கு இணையாகப் பேசப்படுவது. திருக்குறள் இரு வரிகள் நாலடியார் நான்கு வரிகளுடையது. 

2015 -2017ல்  3 பாடல்களிற்கு எனது வரிகள் எழுதி வேதாவின் வலை-2ல் பதிவேற்றி வல்லமை இணையத் தளத்திலும் பதிந்திருந்தேன். இன்று 4வது பாடலிற்கு வரிகள் எழுதி இங்கு பதிகிறேன்.




நாலடியார்- அறிவுடைமை;

அதிகாரம் -25

4. (244)

வேம்பி னிலையுட் கனியினும் வாழைதன்

றீஞ்சுவை யாதுந் திரியாதா – மாங்கே

யினந் தீதேனினு மியல்புடையார் கேண்மை 

மனந் தீதாம் பக்க மரிது


வேம்பின் இலையுள் - வேப்பிலையில்    கனியினும் - பழுத்தாலும் தீஞ்சுவை - இனிய சுவை  யாதும் - எவ்வளவும்  திரியாது – வேறுபடாது ஆங்கு – அது போல  இனம் - தாம் நட்புக்கொள்ளும் இனம் தீது எனினும் - தீமை பயப்பதாயினும்  இயல்பு உடையார்- நற்குணமுடையவரது  கேண்மை – உறவு  தீதுஆம் -கொடியதாகும். (இயற்கையில் நல்லறிவுடையோர் தீயோர் உறவால் கெடுவதிலர் என்றபடி)


எனது வரிகள்:-


வைக்கோலினுள் மாம்பழம் பழுக்கும்.

வேப்பமிலையுள் வாழைப்பழம் பழுத்தாலும்

தப்பாது இனிக்கும் கசக்காது.

இப்படியாக நம் நட்பினம்

தப்பானவரானாலும் எம் குணம்

செப்பமானதால் கொடியதான தன்மைக்கு

ஒப்பாகாது  நற்குணம் நீளும்.

--------------

கவியருவி  வேதா.இலங்காதிலகம் - தென்மார்க் 9-9-2025 


         



ஞாயிறு, 7 செப்டம்பர், 2025

509 (1051) தானாக வருவது.....

 

          




தானாக வருவது.....


சாதனை சாதிக்கும் காதல்   நல்

போதனை போதிக்கும் காதல்

வேதனை தீர்க்கும் காதல் நெஞ்சில்

வேகமாய்ப் பாயும் காதல்

இன்னுயிர்த் தாமரை இதயப் பொய்கையில்

புன்னகை ஒளியால் கண்விழி வழியால்

புது மின்சாரம் பின்னும் காதல்

புதுக் கவிதை பின்னும் காதல்

00

அன்பு - விருப்பம்  எவரும் அழைத்து வருவதல்ல

தன்னால் மலரும் விரும்பினால் நல்லுறவு கொள்ளலாம்.

தடை ஏதுமில்லை விரும்பாவிடில் காரணம் சொல்லி

விலகிச் செல்லலாம் அது சுய விருப்பம்

00



             


2020


வெள்ளி, 5 செப்டம்பர், 2025

508 (1050) தை பிறந்தால் வழி பிறக்குமா! (பொங்கல் வாழ்த்து)

 

      தை பிறந்தால் வழி பிறக்குமா! (பொங்கல் வாழ்த்து)





பொங்கட்டும் பொங்கல் உழவர் பெருமக்களுக்கு!

பொங்கல் பொங்கட்டும் புதிய அரிசியில்!

பொங்கட்டும் பொங்கல் ஆதவனுக்கு நன்றியில்!

பொங்கட்டும் ஆனந்தம் அனைவர் மனதிலும்!

தைபிறந்தால் வழி பிறப்பதாய் நம்நாட்டிலும்

கை ஏந்தட்டும் ஆறுதல் பத்திரங்கள்!

வைப்பான ஆசை உயிர்த்தெழட்டும்!


பச்சரிசி, சர்க்கரை, பால், பயறு

உச்சமாய் கலந்து வைக்கும் பொங்கலாய்

அச்சமின்றி இந்து, இஸ்லாம், கிறீஸ்தவர்

இச்சையாய் ஒன்று கலந்து மகிழட்டும்!

பச்சரிசிப் பொங்கல் இனிது பொங்கட்டும்!

உச்சமான உன்னதக் காலநிலை நாடு

இச்சகத்தில் இலங்கை யென உலகம்

மெச்சும் நிலை அரசியலாகப் பொங்கட்டும்!


பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

13-1-2013


    



507 (1049) ( uudakam) தடாகம் kavithai - பணம்

 

 முன்னைய தடாகம் கலை இலக்கிய வட்டம் 

அமரர் - கலைமகள் கிதாயா றிஸ்வியின் முகநூல்

 செய்த கவிதைப்போட்டிகளில் பங்குபற்றி

விருதுகள் வாங்கியுள்ளேன் - கவியூற்று

கவினெழி -கவியருவி. அவர் ஒரு நூல் செய்தார்

100 போட்டியானர்களின் கவிதகள். அதில்

வெற்றி பெற்ற எனது கவிதையும் அதன் 

ஆங்கில மொழி பெயர்ப்பும்  பிரசுரமாகியிருந்தது.

புத்தகத்திற்கு பணமும் அனுப்பியிருந்தேன். சடுதியாக

 அவர் மறைந்துவிட்டார் புத்தகமும் எனக்குக் 

கிடைக்கவில்லை. தேடிப்பிடித்து பிறரிடம் பெற்றது இது.

5-9-2025


  



       


பணம் 

ஒரு கடதாசிக்குக் கிடைத்த வெகுமதி

ஒரு சோடி எண்களுக்குக் கிடைத்த பெறுமதி

பெருமைமிகு மனிதப் படைப்புப் பணம்.

அருமைத் திறமை  மதிப்பு  மனிதப் பெறுமதி

துரும்பாகிறதே இவன் படைப்பின் முன்பு.

மாறுபட்ட வடிவமாகி நாட்டுக்கு நாடு

பெறுமதி   பெயர் வேறு ஆகிறது.

திருவாகி   இலட்சுமி கடாட்சம் ஆகிறது.

00

 பணம் மட்டும் எதுவும் செய்திடாது.

பணம் இல்லாவிடில் எதுவும் ஆகாது.

பணம் – மனிதக்குணம் மாற்றும் உரைகல்.

கடின உழைப்பாளி உழைத்துப் பெறுவான்.

கருமிஇ உண்ணாமல் உடுத்தாமல் சேர்ப்பான்.

திருடன்  பித்தன்  கனவான்   விபச்சாரம் 

திருவோடு ஏந்தி  திருமண் பூசியும்

திறமையாய்ப் பணம் சம்பாதிப்பார்.

00

ரூபா - றுப்பியா -டொலர் -றிங்ஙிட்-

ரூபிள்-  ஈறோ - குரோணர் -  பவுன்சென்று

நாடுவிட்டு நாடு மாறி மனிதர்

வாடுவதும்  மகிழ்வதும் இவைகளுக்காக.

பணம் பற்றிப் பழைய மொழிகள்-....

பணமென்றால் பிணமும் வாய் திறக்கும்.

பணமில்லாதவன் பிணத்திற்குச் சமம்.

பணம் பாதாளம் வரை பாயும்.

00

15-11-2006.

(சிஐ ரிவியில் வாசித்தேன்.ரி.ஆர்.ரி தமிழ் அலை -   இலண்டன் தமிழ் வானொலியிலும்

என்னால் வாசிக்கப்பட்டது.)



    


திங்கள், 1 செப்டம்பர், 2025

506 (1048) எனது எட்டாவது நூலாக - சான்றிதழ்க் கவியதிகாரம் 2

 

      எனது   எட்டாவது நூலாக 

- சான்றிதழ்க் கவியதிகாரம் 2  -  உருவாகியுள்ளது.

     


போட்டிகளில் நான் பெற்ற சான்றிதழ்களும் கவிதைகளுமாக ஜீவநதி பதிப்பகம் தொகுத்துள்ளது. 99 கவிதைகள் இடம் பெற்றுள்ளது. இது ஒரு அங்கீகாரமாக ஏற்றுக் கொள்ளலாக - ஆவணமாக இருக்கும்.

கவிஞர் எழுத்தாளர் மொழி பெயர்ப்பாளர் சிட்னி கீதா மதிவாணன் அணிந்துரை எழுதியுள்ளார். கீதமஞ்சரி எனும் இணையத் தளம் பார்த்தால் அவர் பற்றி அறியலாம். 

சுவிஸ் பாவலர் மணி சரளா. விமலராசா முன்னுரை எழுதியுள்ளார். பத்துக்கும் மேற்பட்ட இலக்கணக் கவிதை நூல்கள் வேறும் பலவும் எழுதியுள்ளார்.

பின் அட்டையில் சில நேயர்களின் கருத்துகள் இடம் பெற்றுள்ளது.


         



வேதா.இலங்காதிலகம் தென்மார்க்- 1-9-2025



        



568 (1068) sanrithal - (பெண்மை) யாதுமாகி நின்றவள் பெண்ணே!

                 (பெண்மை)    யாதுமாகி நின்றவள் பெண்ணே!   - ( தேன்தமிழ்க் கவிவனம். சர்வதேச மகளிர்தினச் சிறப்புப் பேட்டி.) 00 (குமைதலின்றி – ...