நாலடியார் அறிவுடைமை- முதல் 3 அதிகாரங்களும்
வேதாவின்வலை -2ல் வலையேற்றியுள்ளேன்.
4 ல் இருந்து இங்கு தொடருகிறது.
(மூன்றாவது இன்பவியல்.
00
மனதிலே மகிழ்ச்சியை அடைதல்
அம் மகிழ்ச்சி பொருளாலும் உறவினர்
நண்பினராலும் பெறப்படுவதால் இது பொருட்பாலில்
நட்பியலுக்குப் பின் வைக்கப் பட்டது.)
25ம் அதிகாரம்
4. நாலடியார் - அறிவுடைமை
(தேடி ஆராய்ந்து எழுதுபவை முகநூலில் - இணையத் தளத்தில் பதிவது ஆவணமுமாகலாம்.)
400 தனிப்பாடல்களின் தொகுப்பு சமண முனிவர்களால் தொகுக்கப்பட்ட பதினெண்கீழ்க்கணக்கு நூல்களிகளின் ஒன்றான நாலடியார் ஆகும். திருக்குறளுக்கு இணையாகப் பேசப்படுவது. திருக்குறள் இரு வரிகள் நாலடியார் நான்கு வரிகளுடையது.
2015 -2017ல் 3 பாடல்களிற்கு எனது வரிகள் எழுதி வேதாவின் வலை-2ல் பதிவேற்றி வல்லமை இணையத் தளத்திலும் பதிந்திருந்தேன். இன்று 4வது பாடலிற்கு வரிகள் எழுதி இங்கு பதிகிறேன்.
நாலடியார்- அறிவுடைமை;
அதிகாரம் -25
4. (244)
வேம்பி னிலையுட் கனியினும் வாழைதன்
றீஞ்சுவை யாதுந் திரியாதா – மாங்கே
யினந் தீதேனினு மியல்புடையார் கேண்மை
மனந் தீதாம் பக்க மரிது
வேம்பின் இலையுள் - வேப்பிலையில் கனியினும் - பழுத்தாலும் தீஞ்சுவை - இனிய சுவை யாதும் - எவ்வளவும் திரியாது – வேறுபடாது ஆங்கு – அது போல இனம் - தாம் நட்புக்கொள்ளும் இனம் தீது எனினும் - தீமை பயப்பதாயினும் இயல்பு உடையார்- நற்குணமுடையவரது கேண்மை – உறவு தீதுஆம் -கொடியதாகும். (இயற்கையில் நல்லறிவுடையோர் தீயோர் உறவால் கெடுவதிலர் என்றபடி)
எனது வரிகள்:-
வைக்கோலினுள் மாம்பழம் பழுக்கும்.
வேப்பமிலையுள் வாழைப்பழம் பழுத்தாலும்
தப்பாது இனிக்கும் கசக்காது.
இப்படியாக நம் நட்பினம்
தப்பானவரானாலும் எம் குணம்
செப்பமானதால் கொடியதான தன்மைக்கு
ஒப்பாகாது நற்குணம் நீளும்.
--------------
கவியருவி வேதா.இலங்காதிலகம் - தென்மார்க் 9-9-2025


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக