ஞாயிறு, 7 செப்டம்பர், 2025

509 (1051) தானாக வருவது.....

 

          




தானாக வருவது.....


சாதனை சாதிக்கும் காதல்   நல்

போதனை போதிக்கும் காதல்

வேதனை தீர்க்கும் காதல் நெஞ்சில்

வேகமாய்ப் பாயும் காதல்

இன்னுயிர்த் தாமரை இதயப் பொய்கையில்

புன்னகை ஒளியால் கண்விழி வழியால்

புது மின்சாரம் பின்னும் காதல்

புதுக் கவிதை பின்னும் காதல்

00

அன்பு - விருப்பம்  எவரும் அழைத்து வருவதல்ல

தன்னால் மலரும் விரும்பினால் நல்லுறவு கொள்ளலாம்.

தடை ஏதுமில்லை விரும்பாவிடில் காரணம் சொல்லி

விலகிச் செல்லலாம் அது சுய விருப்பம்

00



             


2020


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

568 (1068) sanrithal - (பெண்மை) யாதுமாகி நின்றவள் பெண்ணே!

                 (பெண்மை)    யாதுமாகி நின்றவள் பெண்ணே!   - ( தேன்தமிழ்க் கவிவனம். சர்வதேச மகளிர்தினச் சிறப்புப் பேட்டி.) 00 (குமைதலின்றி – ...