பூதலத்தில் தீதின்றி வாழப் பழகுங்கள்!
பரந்த வானின் கீழ்
பசுமை பூமி வஞ்சகமற்று
நிரந்தரமாய் அமைந்திருக்கிறது.
வேரது பரப்பவும் இடமின்றி
அரக்கத்தனமாகப் போதைப் பொருள்களை
ஆழப்புதைக்கிறான் ஆறறிவு மனிதன்.
00
பூமகள் அமைதிச் சின்னம்!
பூதேவி பொறுமைத் தாய்!
பூகண்டத்தைக் குடைகிறாய் போதுமானவரை!
பூவுலகம் சாதுவாகச் சமாளிக்கிறது
பூமியின் மண்ணிறமொழி தடைப்பட்டால்
பூரணமாக மாட்டுப்படுதலே!....நீங்கள்
தீதின்றி வாழப் பழகுங்கள்!!!!
00
பா வானதி - வேதா. இலங்காதிலகம் தென்மார்க். 27-9-2025



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக