வெள்ளி, 5 செப்டம்பர், 2025

508 (1050) தை பிறந்தால் வழி பிறக்குமா! (பொங்கல் வாழ்த்து)

 

      தை பிறந்தால் வழி பிறக்குமா! (பொங்கல் வாழ்த்து)





பொங்கட்டும் பொங்கல் உழவர் பெருமக்களுக்கு!

பொங்கல் பொங்கட்டும் புதிய அரிசியில்!

பொங்கட்டும் பொங்கல் ஆதவனுக்கு நன்றியில்!

பொங்கட்டும் ஆனந்தம் அனைவர் மனதிலும்!

தைபிறந்தால் வழி பிறப்பதாய் நம்நாட்டிலும்

கை ஏந்தட்டும் ஆறுதல் பத்திரங்கள்!

வைப்பான ஆசை உயிர்த்தெழட்டும்!


பச்சரிசி, சர்க்கரை, பால், பயறு

உச்சமாய் கலந்து வைக்கும் பொங்கலாய்

அச்சமின்றி இந்து, இஸ்லாம், கிறீஸ்தவர்

இச்சையாய் ஒன்று கலந்து மகிழட்டும்!

பச்சரிசிப் பொங்கல் இனிது பொங்கட்டும்!

உச்சமான உன்னதக் காலநிலை நாடு

இச்சகத்தில் இலங்கை யென உலகம்

மெச்சும் நிலை அரசியலாகப் பொங்கட்டும்!


பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

13-1-2013


    



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

568 (1068) sanrithal - (பெண்மை) யாதுமாகி நின்றவள் பெண்ணே!

                 (பெண்மை)    யாதுமாகி நின்றவள் பெண்ணே!   - ( தேன்தமிழ்க் கவிவனம். சர்வதேச மகளிர்தினச் சிறப்புப் பேட்டி.) 00 (குமைதலின்றி – ...