சனி, 23 பிப்ரவரி, 2019

29. (615) பற்றிக் கொண்டு படர்!







பற்றிக் கொண்டு படர்

ஆம்! அத்தனையும்  பற்றிக்கொண்டு  படர்தலே.
பொன்மொழிகளாம்   நல் வார்த்தைகளை
பண்புடைய நல்ல செயல்களை நாம்
பற்றிப் படர்ந்தே நல் மனிதரானோம்.
காற்று எப்படி  யெங்கும் புகுந்திடுதோ
ஒற்றும் நல்லவைகளும் பரவி ஒளிர்கிறது.

உயிர்க்க நினைக்கும் கொடிகளான பச்சைகள்
கொழுகொம்பைப்   பற்றுதலாக  நல்லவற்றைப் பற்றுதலுயர்வு.
வழுகினாலும் இறுகப் பற்றி எழு!
ஒற்றை   விரல்   பற்றி   ஆரம்பிக்கும்
பெற்றவர் நற் பண்புகள் தொற்றி
மழலை எம்மைச் சுற்றியே படர்கிறது.

பெற்றவர் பொறுப்பு  விலை  மதிப்பற்றது.
கற்றுக் கொண்டு வளர்தலும் கருணை
காட்டிக்   கொண்டு  வாழ்தலும்  பெருமை.
புற்றாக கெட்டவை வளர்த்து வாழ்வில்
கருநாகவிடமாக அவற்றை உமிழ்தல் கேடு.
ஆகவே  நல்லதைப் பற்றிக்கொண்டு படர்!

.12-7-2017






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

428 (961) ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை.

                       ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை மிருகக் காட்சிச் சாலை மாறி மனிதரே மறந்த மனிதம் போனதால் மனிதக் காட்சிச் சாலை...