செவ்வாய், 9 ஜூலை, 2019

133. (709) ஏணிகள் ஏறுவதில்லை




இலண்டன் தமிழ் வானொலி வியாழன் கவிதை

ஏணிகள் ஏறுவதில்லை

தோணியாய்க் கைகொடுத்துப் பிறர் நலம்பேணுவோர்
ஏணியாயிருந்து திறன்களை உயர்த்துவோர்
நற்கேணி மனதாளர் நற்தகுதிப் பணியாளர்.
ஆணியடித்தது போற் காணியில் நின்றிடும்
ஏணிகள் ஏறுவதில்லைஏற்றப் படுவதுமில்லை.
நாணிடும் செயலே வீணில் குளம்பாது
பாணியை மாற்றி மனிதநேயம் பேணுவோம்.
வாணியருளால் ஏணியை மதித்து ஆதரிப்போம்.

உதவியெடுத்தோர் பண்பிழந்த செயல்கள், வார்த்தைகள்
உதவிய உன்னதத்தை உடைக்கும் பாறைகள்
பதவிசு காத்து நற்பண்பு வளர்க்கும்
கதவு திறத்தல் ஏணியை உயர்த்தும்.
நூற்றில் ஒருசிலர் ஏறிய ஏணியை
கீறி சேதமாக்காது கூறிப் போற்றுவார்.
மாறிடும் உலகில் நழுவிடும் மனிதத்தில்
மீறிடும் பண்பது பீறிடுதல் நன்மையதே!

1-8-2004




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

602 (1102) பெட்டகோ பட்டம்!

                நான் 1990 ல் இருந்து 1993 வரை படித்த செமினாறியக் கட்டிடம் இடித்து தொடர் மாடியாகக் கட்டி பலர் குடியிருக்கின்றனர். வாகனத்தில் ...